Skip to main content

Posts

Featured

பம்பாய் ஐஐடி - தமிழ்த் திருவிழா சிறப்புரை

 பம்பாய் ஐஐடியில் பயில்கிற, பணியாற்றுகிற தமிழர்களின் அமைப்பு ‘தமிழ் மரபு மன்றம்’. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி ‘தமிழ்த் திருவிழா’ நடத்தி வருகிறார்கள். அதன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். கடந்த ஆண்டுகளில் ஜோ டி குரூஸ், பவா செல்லதுரை ஆகியோர் பேசிய மேடை.  வளாக நேர்முகங்களில் கனத்த சம்பளம் வென்ற இறுதியாண்டு மாணவர்கள், அங்கேயே பிறந்து ஐஐடி வளாகத்திலுள்ள பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களது கலை நிகழ்ச்சிகளைக் காண வந்த பெற்றோர் என கலவையான பார்வையாளர்கள். என்னுடைய உரையை மூன்று அம்சங்களாகக் கட்டமைத்தேன். நாம் எந்த நெடிய மரபின் தொடர்ச்சி எனும் போதமும், அதைத் தாண்டிச் செல்வதற்குரிய வீரமும் இருக்க வேண்டும் என்பதை சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர், கீழடி துவங்கி சமீபத்தில் குத்துக்கல்பாளையத்தில் கிடைத்த இரும்பொறை மண்பாண்டம், சிகைக்  கொற்றனின் குகைக் கிறுக்கல்கள், அத்திகோசத்தார் இனக்குழு, பழந்தமிழரின் வணிக விரிவு  ஆகியவற்றைக் கொண்டு ஒரு சித்திரத்தை தீட்ட முயன்றேன். நமக்குக் கிடைத்திருக்கும் கல்வெட்டுச் சான்றுகள், பானைக் கிறுக்கல்கள் மூலம் வேத காலத்துக்கு முன்...

Latest Posts

மறவோம் - Remembering Bapuji உரை

சென்னை புத்தகக் காட்சியை செம்மையாகப் பயன்படுத்திக்கொள்வது எப்படி?

தேவி விலாஸம்