கலியுகக் கதைகள்

ம்மூரு எம்.பி ஒருத்தர் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் சிறப்பு அழைப்பாளரா அமெரிக்கா போயிருந்தார். அவரை ஒரு செனட் சபை உறுப்பினர் தன்னோட வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டார். நம்மூர்காரரும் வர்ற ஞாயித்துக்கெழமை வாரேன்னுட்டு சொன்ன சொல் தவறாம அங்க போனார். செனட் சபை உறுப்பினரின் வீட்டைப்பாத்த நம்மாளுக்கு பயங்கர ஆச்சர்யம்... எவ்வளவு பெரிய பங்களா... அஞ்சு காரு... பத்துப்பதினைஞ்சு வேலைக்காரங்க... அம்புட்டு சம்பளமெல்லாம் கெடையாதே எப்படி இப்படி ஒரு லைஃப் ஸ்டைல்னு ஓரே சந்தேகம். எப்படிய்யா இதெல்லாம் வாங்கினேன்னு அந்த எம்பியைக் கேள்வி மேல கேள்வி கேட்டு ஏகக் குடைச்சல். இம்சை தாங்காத அந்த செனட் உறுப்பினர் 'சத்தம் போடாம எங்கூட வான்னு... பங்களாவோட இரண்டாவது மாடிக்கி கூட்டிட்டுப் போனார். ஜன்னல் திரையை விலக்கி...'அங்க பாரு'ன்னார். அங்கே ஒரு பாலம் இருந்துச்சி. பத்து விரலையும் காட்டி 'பத்து பர்செண்ட்' னு சொன்னார்.

காலம் கடந்தது. அந்த செனட் சபை உறுப்பினர் சிறப்பு விருந்தினராக இந்தியா வந்திருந்தார். விருந்தோம்பல் தமிழனின் குணமல்லவா?! அந்த அமெரிக்க எம்பியை தன்னுடைய வீட்டுக்கு சாப்பிட வரச்சொன்னார். அவரும் வந்தார். அரண்மனைப்போன்ற வீடு, நீச்சல் குளம், பதினைந்து கார்கள், நூறு வேலைக்காரர்கள், வீடு முழுக்க தேக்கினால் ஆன பர்னிச்சர்கள், திரும்பிய இடமெல்லாம் செல்வச் செழிப்பு. அந்த அமெரிக்க எம்.பியால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. இந்தியா எழை நாடு என்கிறார்களே ஒரு எம்.பிக்கு இப்படி மகாராஜா மாதிரி லைஃப் ஸ்டைலா என்று தாங்காமல் கேட்டு விட்டார். நம்மூரு எம்.பி அவரது வாயைப் பொத்தி தன் வீட்டின் இரண்டாவது மாடிக்கு அழைத்துச் சென்று ஜன்னல் திரையை விலக்கிக் காண்பித்தார். பொட்டல் வெளி. அங்கே எதுவுமே இல்லை.

"100 பர்செண்ட்?!"


கதையின் நீதி:

மேலைநாடுகளிலும் ஊழல் உண்டு. திட்டத்தை நிறைவேற்றிவிட்டு மிச்சத்தை அடிப்பார்கள். இங்கே தின்று தீர்த்துவிட்டு மிச்சம் இருந்தால் திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.

Comments

Popular Posts