வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலருக்கு
மழை வந்து விடுகிறது
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
யாராவது
வந்து வழி விசாரிக்கிறார்கள்
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலர்
தொடர்பு எல்லைக்கு வெளியிலே இருக்கிறார்கள்
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலருக்கு
வயிற்றுப்போக்கு பெருக்கெடுத்துவிடுகிறது
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலரது
முதுகில் ஒட்டுப்புல் ஒட்டிக்கொள்கிறது
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலருக்கு
கள்ள சம்போகம் கிட்டுகிறது
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலர்
பரோட்டா சாப்பிடுகிறார்கள்
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலர்
கவிதைகள் எழுதுகிறார்கள்.
(தினகரன் தீபாவளி மலரில் வெளியான கவிதை)
9 comments:
மிகவும் அருமை நண்பரே...!!! ஒரு இக்கட்டான தருணத்தில் இதை படிக்க முடிந்தது....!!!
மிகவும் அருமை நண்பரே...!!! ஒரு இக்கட்டான தருணத்தில் இதை படிக்க முடிந்தது....!!!
மிகவும் அருமை நண்பரே...!!! ஒரு இக்கட்டான தருணத்தில் இதை படிக்க முடிந்தது....!!!
மிகவும் அருமை நண்பரே...!!! ஒரு இக்கட்டான தருணத்தில் இதை படிக்க முடிந்தது....!!!
Nice
நல்ல வரிகள் ...
எப்போதுமே இக்கட்டான தருணம் தானா ....?!
நேர்-அறிமுகம் இல்லாத ஒருவரை "அண்ணா" என்று அழைக்கும் அன்பு இந்த தமிழ் வலைப்பதுவுகளின் மூலமாக கிடைத்தது தான்! பரிசல்காரன் வலைத்தளம் மூலம் தான் உங்கள் அறிமுகம் கிடைத்தது.. கடந்த பலவருடத்தின் சில தருணங்களில் உங்கள் எழுத்துக்களோடு முகமன் கொண்டிருக்கிறேன்! ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு போகவே இந்த நிமிடம்.. "வாழ்த்துக்கள் அண்ணா !"
நேர்-அறிமுகம் இல்லாத ஒருவரை "அண்ணா" என்று அழைக்கும் அன்பு, இந்த தமிழ் வலைப்பதுவுகளின் மூலமாக கிடைத்தது தான்! பரிசல்காரன் வலைத்தளம் மூலம் தான் உங்கள் அறிமுகம் கிடைத்தது.. கடந்த பலவருடத்தின் சில தருணங்களில் உங்கள் எழுத்துக்களோடு முகமன் கொண்டிருக்கிறேன்! ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு போகவே இந்த நிமிடம்.. "வாழ்த்துக்கள் அண்ணா !"
நேர்-அறிமுகம் இல்லாத ஒருவரை "அண்ணா" என்று அழைக்கும் அன்பு, இந்த தமிழ் வலைப்பதுவுகளின் மூலமாக கிடைத்தது தான்! பரிசல்காரன் வலைத்தளம் மூலம் தான் உங்கள் அறிமுகம் கிடைத்தது.. கடந்த பலவருடத்தின் சில தருணங்களில் உங்கள் எழுத்துக்களோடு முகமன் கொண்டிருக்கிறேன்! ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு போகவே இந்த நிமிடம்.. "வாழ்த்துக்கள் அண்ணா !"
Post a Comment