மனக்காளான்


* ரமேஷ் வைத்யாயும் இளவெயினியும் மணிக்கணக்கில் போனில் பேசிக்கொள்கிறார்கள்; எதைப் பற்றி பேசுகிறார்களென்றுதான் பிடி கிடைப்பதில்லை.


* வேலைகளில் பிந்தினாலும், ரிப்போர்ட் அனுப்புவதில் முந்துபவனே கார்ப்பரேட் வாழ்வின் செல்லப்பிள்ளை.

* மணிக்கணக்கில் வாசித்தாலும் இணைய தள வாசிப்பு ஒருபோதும் புத்தக வாசிப்புக்கு மாற்றல்ல.

* கடனெனப்பட்டதே இல்வாழ்க்கை.

* ஒன்றைப் பற்றி எழுதவேண்டுமென தீர்மானித்து, யோசித்து மனதிற்குள் தொகுத்து விட்டு, எழுத உட்காருகையில் எனக்கே அது  பழசாகி விடுகிறது.

*  சர்றா...
  காதலிக்கேன்
  காசு தருவேல்ல... - மதுமிதா கவிதைகள்

* டாஸ்மாக் வழங்கும் 'நீங்களும் செல்லலாம் தெருக்கோடி...!'

* அவர் ஒரு வணிகன். நான் ஒரு வணிகன். நீ ஒரு வணிகன். ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து வணிகத்திற்கு என்ன ஆகப்போகிறது?! - பிரதியங்கார மாசனமுத்து

* முத்து கிருஷ்ணனும், யமுனா ராஜேந்திரனும் சூரத்தாண்டவம் ஆடிய பின் உயிர்மையில் எஞ்சியிருப்பது நல்லி சில்க்ஸ் விளம்பரம் மட்டுமே.

* மூளை தீக்குளிப்பை மடத்தனம் என்றாலும் இதயம் அதனை வீரமென்றே மானசீகமாக தலை வணங்குகிறது.

* ங்கோத்தா..அவன் சங்க அருக்கறேன்டா..சீறியபடி பைக்கில் கிளம்பியவன் தெருமுனையை திரும்புவதற்குள் சரிந்து விழுந்தான். கழுத்தில் மாஞ்சா நூல்!# மீச்சிறு கதை

* பெண்ணுக்குப் பேராசை வைத்தான்... புவி பேணி வளர்த்திடும் ஈசன்... மண்ணுக்குள்ளே சில மூடர் பெரும் ஜவுளிக் கடைகளைத் திறந்தார்...

* வெல்லம் கொள்ளை போகுதே... வாங்கி வந்த நாள் முதல்...
இல்லம் வந்த எறும்புகள்... ஏந்திக் கொண்டு செல்லுதே...


* அக்சுவலா ’ஆனந்த் சார்’ என்கிறவர் யார்?! தொண்டைக்குள் இறங்கி தூர் வாருவாரா...?!

* ’ரைட்டர் மடையன்’ என்றொருவர் ஃபேஸ்புக்கில் இருக்கிறார். ’கேட்ச் புடி’ ‘நடு சென்டர்’ மாதிரி வார்த்தைக் கோர்ப்பு இது.

* நீங்க எவ்ளோ ஜிபிக்கு எழுதியிருக்கீங்க... # சமகால தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொள்ளும்போது இப்படித்தான் கேட்டுக்கொள்கிறார்களாம்!

* சுஜாதாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டதெல்லாம் ஓவர் ஆக்டிங் கூடாது என்பதைத்தான். நடிகை சுஜாதாவைச் சொன்னேன்.

* சேதன் பகத்துக்கு மூக்கு புடைப்பாக இல்லை; இருந்தாலும் எவ்வளவு ஐடியாக்கள் வருகிறது பாருங்கள்?!

* மிஸ்டேக்காக எழுதுவதை சுதந்திரமாகவும் மிஸ்டிக்காக எழுதுவதை தந்திரமாகவும் கொள்வதை எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டும் -பிரதியங்கார மாசானமுத்து

* கவிதைப் புயல்களைக் கட்டுக்குள் கொண்டு வர புலவர் நாஞ்சில் நாடனை சமீபத்திய செய்யுள்களோடு களமிறக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

* சரவலென்னவோ சாத்தானுக்கும் கடவுளுக்கும்...
சங்கடமெல்லாம் பக்தனுக்குத்தான்!

* டெக்கான் சார்ஜஸை ஏன் விற்க நேர்ந்தது என்பதை காயத்ரி ரெட்டியின் கிரிக்கெட் ட்வீட்டுகளை வாசிக்கையில் புரிந்துகொள்ள முடிகிறது.

* கர்ணன் தன் கவச குண்டலத்துடன் ஜோய் ஆலுக்காஸ் விளம்பர மாடலாகி இருப்பார் #IfMahabharatHappenedNow

* ராமரும், சீதாவும் ஹெஸ்ட் ரோலில் க்ளைமாக்ஸில் அப்பியராகி இருப்பார்கள் #IfMahabharatHappenedNow

* யாரோடும் ஏழைமை பேசேல்...!

* நீ தமிழிலக்கியத்திற்கு ஏதாவது செய்யவேண்டுமென நினைத்தால், எழுதாமலிரு! - பிரத்தியங்கார மாசானமுத்து

* ஹவுஸ் ஓனரின் டார்ச்சர் தாங்காமல் அவரை கொலை செய்த சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளனவா?!

* உலக தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் ஒரு கார்ட்டூன் பாத்திரமும் சேர்ந்து நடிப்பது சரவணன் மீனாட்சியில்தான் # குயிலி

* தமிழ் நாவலொன்றின் ஆங்கிலமொழியாக்கத்தை மெய்ப்பு பார்த்துக்கொண்டிருக்கிறேன்; பெட்டிக்கடை என்பதை பொட்டீக் ஷாப் என பெயர்த்திருக்கிறார்.ம்...ம்...டிவைன்

* சிலர் யோ யோ ஹனிசிங்கின் மண்டை ஹோசிராப்பூர் மேப் எனத் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். அது ஒரு ஸ்டைல். அவ்வளவுதான்.

* 'விஷ் யூ எ ஹேப்பி ஹர்த்தால்' - இப்படியொரு மெஸெஜ் கேரள நண்பனிடமிருந்து வந்திருக்கிறது!

* க்ரீன் டீ-ல் நாட்டுச் சர்க்கரையை கொட்டி அரங்கசாமி அலுவலகத்தில் ஒரு திரவம் கொடுக்கிறார்கள்; குடலை சுத்தம் செய்ய இதைவிட வேறு மாற்று இல்லை!

* அம்சவேணிக்கு நல்ல ஆம்சு பவருடா... அசைஞ்சு வருகையில் அவளொரு ஆடி காருடா...

* அழுக்கு சாக்ஸை விட கிழிந்த சாக்ஸ் மேலானது! # ஒரு ட்வீட் தேத்தினேன் பார்த்தீங்களா...?!

* என்னுடைய லட்சியமெல்லாம் இந்தியாவின் முதல் சுமோ மல்யுத்த வீரனாகி நாட்டின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான்.

Comments

Popular Posts