மனக்காளான்

* ஒரு சிந்தனையாளனின் எடை தோராயமாக எவ்வளவு இருக்குமென எவராவது கேட்டால் 72 கிலோ 300 கிராம் என பதில் சொல்லுங்கள் # இப்பத்தான் எடை பார்த்தேன்.

* இணையத்தில் ஒருவர் எழுதி சொந்த காரணங்களுக்காக அவரே அழித்து விட்ட விஷயத்தை தேடி அலைவது என்ன மாதிரியான மனநிலை?!

* slept?! என நடுநிசியில் வரும் குறுஞ்செய்திகளை இக்னோர் செய்யாமல் அழைத்துப் பேசுங்கள்; ஒரு தற்கொலை தடுக்கப்படலாம்.

* ஊத்தாம்பட்டி - நாகர்கோவில் ஜில்லாவில் பலூனின் பெயர்!

* சந்தகை - கொங்கு மண்டலத்தில் இடியாப்பத்தின் பெயர்!

* சென்ஸார் போர்டு உறுப்பினர்கள் மிச்சர் தின்ன தடை விதிக்க வேண்டும்! - செல்வேந்திரன் கோரிக்கை

* பிரதி மாதம் 25-ஆம் தேதி துவங்கி சம்பளம் கிரெடிட் ஆகும் 5-ஆம் தேதி வரை இல்லங்களில் ஒலிப்பதுதானே 'பஞ்ச'ரத்ன கீர்த்தனைகள்...?!

* ஒரு சிந்தனையாளனை இவ்வளவு காலம் தாழ்த்தி பின்தொடர்வதில் உங்களுக்கு மனவருத்தம் ஏதுமில்லையே...?!

* தெலுங்கில் பவன் கல்யாணும், கன்னடத்தில் புனீத் ராஜ்குமாரும், தமிழில் சீனிவாசனும் பவர் ஸ்டார்களாக அறியப்படுகிறார்கள் # டி.என்.பி.எஸ்.சி-ல கேட்டாலும் கேட்கலாம்!

* நாராயணசாமி பேசும்போது பிரம்மானந்தம் முகம் நினைவுக்கு வருவது எனக்கு மட்டும்தானா...?!

* பொதுவாக திருநெல்வேலி ஜில்லாவில் எம்.எல்.எம் பஜனை குறைவு. காரணம் சிம்பிள்: ஏமாத்துனா இழுத்துப் போட்டு வெட்டுவாங்க!

* வாத்யார்களைக் கேலி செய்பவர்களை பிற்பாடு வாழ்க்கை கேலி செய்துவிடுகிறது.

* விசாகா சிங் அழகியல்ல; ஆனால், மொழியால் உணர்த்தி விட முடியாததொரு கவர்ச்சி உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

* தமிழகத்தில் திருட்டு வட்டுக்கள் தழைத்தோங்க அவற்றை ஓட விட்டு (ஃபார்வர்டு) பார்க்க முடியுமென்பதும் பிரதான காரணம்!

* கடல் உயிரினங்களை சமைப்பதில் ஒவ்வொரு பத்து கிலோ மீட்டருக்கும் இடையில் பரவசமூட்டும் வேறுபாடுகள் தமிழகத்தில் உண்டு.

* 'வலையில் பாய்ந்த இளம்பெருவழுதி' என ஒரு விருதினை தோற்றுவிக்கலாமென்றிருக்கிறேன்...

* எவனோ ஒரு பக்கி பூட்டுன வீட்டுக்கு முன்னாடி TOLETனு என்னோட நம்பர எழுதிட்டு போயிருக்கான்; இதுவரைக்கும் 26 கால்ஸ்.. டேய்ய்ய்ய்ய் முடியலடா...

* Iannis Xenakis-ன் இசையை கவனத்துடனும், மனத்தயாரிப்புடனும் கேட்டேன்; ஸெனாகிஸ்,சாரு,நான் - மூவரில் யார் பைத்தியம் என்ற குழப்பம் வந்துவிட்டது!

* நீஎபொவ - பார்த்து மருமகன் சொன்னான் “போடா போடியை அவசரப்பட்டு திட்டிட்டனே”ன்னு!

* பிரயாணி விட்டுச் சென்ற டைம்பாஸ் இதழை எதிர் இருக்கை சிறுவன் எடுத்துப் புரட்டுகிறான்; எனக்கு பதட்டமாக இருக்கிறது!

* மீன்கள் மிதப்பதனாலே மட்டும் ஒரு குழம்பு மீன் குழம்பு ஆகிவிடாது என்கிற சிந்தனையோடு சாப்பாட்டு மேஜையிலிருந்து எழுகிறேன்...

* டேய் அத்தை ஊருக்குப் போய் ஒருவாரம் ஆச்சேடான்னு கேட்டா ‘அவசரப்படாதீங்க பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்’கிறான் மருமகன்...

* டைமிங்சென்ஸ் எனும் பிரச்சனையை பிரக்ஞையுடன் கைவிட்டாகவேண்டும்; இல்லையெனில் இந்த இளம்பெண்கள் தொல்லையிலிருந்து தப்பிக்கமுடியாது.

* கற்பூர முல்லையொன்று... ஓயாமல் தொல்லை செய்து... உறங்காமல்... உசிர் வாங்குதே... # இளவெயினி ராகங்கள்

* நடுக் கடலுல நாய் வண்டிய ஓட்ட முடியுமா... நாற வாயன் எதிரே நின்னா பேச முடியுமா...

* எதிர்ல இருக்கிறவன் கவனிக்கிறானா இல்லையாங்கிறத பத்தி கவலையே படாம பேசுறதும் ஒரு வரம்தான் போலருக்கு. முடியலடா சாமீகளா!

* டேய் தமிழன்ஸ்... இனிமே பீகார்காரங்கள நக்கல்ஸ் பண்ணுவீங்க...?! # நோ பவர்; நோ வொர்க்; நோ மணி..

* ராஜ் டிஜிட்டல் பிளஸூக்கும், டிஜிட்டல் எனும் வார்த்தைக்கும் சம்பந்தம் இல்லை.

* இறைக்கிற கிணறு ஊறும்; கரைக்கிற கிணறு நாறும். # ஏம்பா... உனக்கு ஏதாவது புரிஞ்சுது...?

* சங்கீதம் பாட... சப்பை மூக்கு உள்ளவர்கள் வேண்டும்... # இளவெயினி ராகங்கள்

* சூடாய் இருப்பின் கேடாய் முடியும்!

* சுற்றி வளைத்த சில்க் போர்டு ஆட்டோக்காரர்களிடம் 'மாங்குடி மருதனார் சாலை' என்றேன்; விட்டு விட்டார்கள் # பெங்களூரு

* பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் சாலையில் காட்டும் வேகத்தைப் பார்த்தால் வீட்டில் மனைவி இருக்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

* இரவில் சுவர்ணலதா கேட்கையில் தன்னையறியாமல் ஒரு துளி கண்ணீர் சுரந்து விடுகிறது.

* எங்கும் பவர்கட் என்பதே பேச்சு... நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு.... சங்கு கொண்டே ஈ.பிக்கு ஊதுவோமே...

* இந்த இரவில்... ஓடும் ரயிலில்... கதவைத் திறந்து... படியில் அமர்ந்து 'பிறை தேடும் இரவிலே...' கேட்கிறேன்; சைந்தவி ஒரு மேஜிக்!

* இந்த பிக்பாக்கெட் வல்லுனர்களெல்லாம் என்னவானார்கள்...?!

* உள்ளொன்று வைத்து புறமொன்று ட்வீட்டுவார் உறவு கலவாமை வேண்டும்.

* நமக்கு ரொம்பவும் வேண்டாதவந்தான் நல்லா ட்வீட்டுறான்; ஆர்டியோ, மென்சனோ போட்டுற முடியுமா? ரோசம் தடுக்குதுல்லா.

* எப்பயாச்சும் கேட்ச் விட்டா பரவாயில்லை; எப்பயுமே கேட்ச் விடுவேன்னா எப்படி?!

* மக்காயமா... மக்காயமா... மக்காயமாமா... மக்காசோளம் மக்காசோளம் விக்க போலாமா...

* அக்காள் என்பவள் அன்னையின் மினியேச்சர்.

* எனக்குநண்பனாய்இருக்கதகுதி தேவையில்லை;எதிரியாய்இருக்கவும்தகுதி தேவையில்லை.அவனவன்காசில் குடிக்கிறவனாய் இருந்தால் போதும்-ஸேம் டிரெய்ன், ஸேம்கவிதை

* ஏன் தம்பீ சேவிங் பண்ணாம இருக்கீயோ?!
நான்: ஹாலிடே மூட் போயிறக் கூடாதுல்லா...
நல்லது... ஜட்டியாச்சும் போடுகேளா... இல்ல அதும்...

* கும்பாட்டத்திலிருந்து சினிமாவிற்கும், சினிமாவிடமிருந்து கும்பாட்டத்திற்கும் பரஸ்பர கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்திருக்கிறது;

* தொடர்பு எண்களைக் கொடுத்து இவர் கிட்ட பேசுங்கன்னு சொன்னா... பேசறதுக்கே நாள் நட்சத்திரம் பாக்கறீங்களேடா... பொறவு எப்படி தொழில் வெளங்கும்?

* வெம்பக்கோட்டை மன்னன் கட்டிய இக்கோவிலை புதுப்பித்தவர் பெயர் 'ஒளிநூல் புலவன் உளமுடையான்'...! # கோவில்பட்டி செண்பகவல்லியம்மன்

* சூடு எனும் வார்த்தையை ஜூடு என்று உச்சரித்தால் பார்ட்டிக்கு ஊரு கோயம்புத்தூர்னு தெரிஞ்சுக்கணும்.

* மழை தேவதையின் பரிசு... யாரும் கவிதை எழுத வேண்டாம்...

* வாழ்க்கை லட்சியங்கள்ல ஒண்ணு: ஶ்ரீசாந்தை ஒரு ஓவர் போடவிட்டு நொங்கெடுக்கணும்கிறது 

* ஐஆர்சிடிசி வெப்சைட்டுல ஃப்ளைட் டிக்கெட்டும் புக் பண்ணலாமாம். # ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்கமுடியாதாம்கிற சந்திரமுகி டயலாக் ஞாபகம் வருது.

* என்னுடைய 2500 வது ஃபாலோயரை என் நாவலின் கதாபாத்திரமாக்கி என்றும் வாழச்செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

* ஒரு கிணற்றின் நீரையே குடித்து வளர்ந்தவனின் மூளையைப் போல அது மந்தமாகவே இயங்கியது. # from my novel

* எழுதிக் களைத்த பேனா நிப்பு சொட்டு மையை வெறியோடு உறிஞ்சுவதை போல உறிஞ்சினான் # from my novel

* இடியின் முழக்கத்தை இரவெல்லாம் மொழி பெயர்க்க வேண்டியவனின் முகம் போல இருண்டு கிடந்தது. # from my novel

* செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே செரிலாக் சாப்பிட தயங்கறீயே...நெசவு செய்யும் திருநாட்டில் ஜட்டியில்லாம திரியறயே... # இளவெயினி ராகங்கள்

* எந்த கழுதையும் நல்ல கழுதைதான் மண்ணில் பிறக்கையிலே... அது பேப்பரை தின்பதும், போஸ்டரை தின்பதும் அன்னை வளர்ப்பினிலே # இளவெயினி ராகங்கள்

* இரண்டு வரிகளுக்கு மேல் சிந்திக்கவோ, சித்தரிக்கவோ முடியாத என் இயலாமைக்கு ட்வீட்டுலக வாழ்வும் ஒரு காரணியா?!

* யாராலும் காதலிக்கப்படாமல் இருப்பது குற்றமில்லை; யாரையும் காதலிக்காமல் இருப்பவர்கள் பூமிக்குப் பாரம்!

* 'டா'வென்று உரிமையோடு அழைக்க ஆளில்லாத ஊரில் வசிக்கிறவன் அந்நியனும் பரதேசியுமே...

* உமர் குல்லோட தம்பிதான் அஜ்மல் கஸாப்போன்னு எனக்கு அடிக்கடி தோணும்.

* பாட்டி,அம்மா,அத்தை,சித்தி,அக்கா,தங்கை,மனைவி,மகள் - இவர்களோடுதான் வாழ்கிறோம் என்பதை ட்வீட்டருக்கு வரும்போது மட்டும் மறந்து விடுகிறார்கள்.

* தீயதை ட்வீட்டாதே; தீயதை ரீட்விட்டாதே; தீயவனை ஃபாலோ செய்யாதே!

* பொது நல நோக்கமற்ற டீசர் விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று; பொதுமக்களை குழப்ப, திகைப்பில் ஆழ்த்த எவருக்கும் உரிமையில்லை.

* அப்போ 'லைஃப் ஆஃப் பை' என்பது கேக் சம்பந்தப்பட்ட படம் இல்லையா...?!

* செல்லினத்தில் 'அன்டோ' ஆப்ஷன் வைக்காமல் விட்டவரை என் பாவம் சும்மா விடாது!

* மெலடியில்சிறந்தவர் பறவைமுனியம்மாவா அல்லது தேனிகுஞ்சரம்மாளா என இரு பிரிவாக அடித்துக்கொள்ள விரும்புபவர்கள் உடனே மைதானத்திற்கு வரவும்!

* தடயமில்லா குற்றம் இன்னமும் செய்யப்படவில்லை.

* மேஜிக்னா என்னங்கியோ... அவியல்ல மாங்கா செய்கதுல்லா அதுதாம்வே...!

* ஆர்ஏசி சீட்டில் அமர்ந்து சற்று நேரம் நூல் விட்ட சீமாட்டி ஸ்லீப்பர் கன்பார்ம் ஆனதும் சொல்லிக்காமல் கிளம்புகிறாள்; இதுதான் வாழ்க்கை!

* பிராயத்தில் யானையோடு ஆற்றில் குளித்த ஆழ்வார்திருநகரி; ஆனையும் இருக்கிறது, ஆறும் இருக்கிறது... நீர்தான் இல்லை.

* லேய் பிள்ளே...காப்பானுக்கு ஆயிரத்தெட்டு வேல... கள்ளனுக்கு ஒரே வேலதான்..களவெடுக்குகது...'

* எந்த அலுவலகத்தின் வரவேற்பறையில் மனிதர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதில்லையோ அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் தேசத்தை முன்னகர்த்துகிறவர்கள்.

* சரக்கடிப்பதற்காகவே 40 பக்க நோட்டுடன் களமிறங்கும் வசூலிஸ்டுகளிடம் 'நானே வீட்டோட மாப்பிள்ளை பாஸ்...' என தப்பிப்பது என் வழக்கம் # டிப்ஸ்

* எவ்வளவு பெரிய எழுத்தாளன் ஆகிட்டாலும் செய்தி சானல்களில் உட்கார்ந்து கருத்து சொல்லக் கூடாது செல்வேந்திரா..எவ்வளவு தூரம் எக்ஸ்போஸ் ஆகிறோம்?!

Comments

* slept?! என நடுநிசியில் வரும் குறுஞ்செய்திகளை இக்னோர் செய்யாமல் அழைத்துப் பேசுங்கள்; ஒரு தற்கொலை தடுக்கப்படலாம். மனம் கல்ங்கியது.
* நாராயணசாமி பேசும்போது பிரம்மானந்தம் முகம் நினைவுக்கு வருவது எனக்கு மட்டும்தானா...?! வயிறு வலித்தது.
* பிரயாணி விட்டுச் சென்ற டைம்பாஸ் இதழை எதிர் இருக்கை சிறுவன் எடுத்துப் புரட்டுகிறான்; எனக்கு பதட்டமாக இருக்கிறது! இதைவிட யாரும் விகடனை அவமானப்படித்திவிடமுடியாது.
Katz said…
// சுற்றி வளைத்த சில்க் போர்டு ஆட்டோக்காரர்களிடம் 'மாங்குடி மருதனார் சாலை' என்றேன்; விட்டு விட்டார்கள் # பெங்களூரு

* பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் சாலையில் காட்டும் வேகத்தைப் பார்த்தால் வீட்டில் மனைவி இருக்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.//

super boss

Popular Posts