மேடைப்பேச்சின் பொன்விதிகள் - கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
முன்பு ‘ஆனந்த் சார்’ என்பவர் ரியாலிட்டி ஷோக்களில் பாடுகிறவர்களுக்குப் பயிற்சி அளிப்பார் இல்லையா அதுபோல இப்போது பேச்சு நிகழ்ச்சிகளுக்கு நான். தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, திமுக நூற்றாண்டு பொறியாளர் அணி பேச்சுப்போட்டி, யான் குறளின் குரல், கொழும்பு றோயல் கல்லூரி, தமிழோடு உறவாடு என இளம்தலைமுறைப் பேச்சாளர்களை அடையாளம் காணவும் பயிற்சி அளிக்கவும் காலம் எனக்கு சில வாய்ப்புகளை அளித்திருக்கிறது. கருத்துக்களை வெளிப்படுத்துவதே பேச்சின் நோக்கம். ஓர் உரை அதன் விளைவுகளால் அளவிடப்பட வேண்டியவை. சொற்பொழிவுகள் கேட்டு மகிழ்வதற்கானவை அல்ல. ஏற்றும் மறுத்தும் முன் நகர்கிற சிந்தனைப்புள்ளிகளை அளிப்பதே காலத்தின் தேவை. புதுயுகம் தொலைக்காட்சி ‘தமிழோடு உறவாடு’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த ஞாயிறன்று நிறைவடைந்தது. பல கட்ட சவால்களுக்குப் பிறகு தேர்வான 14 இளம் போட்டியாளர்கள். முனைவர் கு. ஞானசம்பந்தன், தம்பி முத்துக்குமரன் ஆகியோருடன் நானும் ஒரு நடுவர். தொகுப்பு அனிதா சம்பத். எங்களுக்கு இது ரீயூனியன். கன்னியப்பன் மட்டும்தான் மிஸ்ஸிங். நிகழ்ச்சியை வடிவமைத்தது, தலைப்...






.jpeg)