நினைவூட்டல்

மூத்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ வழங்கும் விழா நாளை மாலை 5 மணிக்கு கோவை பி.எஸ்.ஜி கல்லூரி அரங்கில் நடைபெற இருக்கிறது. விழாவினையொட்டி ஜெயமோகன் ஆ. மாதவனைப் பற்றி எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ எனும் நூல் வெளியிடப்பட இருக்கிறது.

விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், வேதசகாயகுமார், புன்னத்தில் குஞ்ஞப்துல்லா, ஆ. மாதவன், பேராசிரியை எம்.ஏ.சுசீலா, இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

தன்னெழுத்துக்களால் மொழிக்கு அழகு சேர்த்த நம் காலத்தின் மூத்த எழுத்தாளரை வாழ்த்த நல்லிலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட அனைவரையும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் அன்போடு அழைக்கிறேன்.

Comments

a said…
VIZHA SIRAPPURA VAZTHUKKAL...

Popular Posts