மனக்காளான்


* ஏழரை ஆகியும் தூங்குபவனோடு ஏழரையும் சேர்ந்து தூங்குகிறது என்பதறிக!

* நல்லவர்... வல்லவர்... சீனுவானவர்... வார்த்தையில் உண்மை உள்ளவர்...!

* அலர்ஜிக்கு மருந்துண்டு; அறவுணர்ச்சிக்கில்லை!

* மேட்ச் விளையாடுறதுக்கு முன்னடி தயிர்ல சக்கரை கலந்து சாப்பிட்டா நல்லா ரன் அடிக்கலாமாம்; சீனு மாமா சொன்னார்.

* டேய்... த்ரிஷா முன்னாடி சீனு மாமாவ இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேடா...?!

* சீனுமாமா ஒருங்கிணைப்பில் ஒலிம்பிக் சென்றால் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிப்பது உறுதி!

* டேய் டெங்கு, அடங்கு! இல்லையேல் ட்வீட்டடித்தே உன்னை அடக்குவோம் - தமிழ் ட்வீட்டர்கள் பேரவை

* சுஜாதா இறக்கவில்லை; ஆவியாக பரிசலின் உடலில் புகுந்துவிட்டார் # பாருங்களேன் அவரும் இப்போ இதுமாதிரி என்னமாச்சும் சொல்லுவார்!

* இன்று மேட்ச் எதுவும் இல்லாததால் ட்வீட்டர்கள் ஹைலைட்ஸ் பார்த்து ட்வீட்டுவார்கள் என நினைக்கிறேன்

* உயிரோசை என்பது இன்னொரு தமிழ்மணம்!

* கலா மாஸ்டருக்கு பிடித்த பிளேயர் பிராவோதானாம்...!

* ட்வீட்டருக்கென்று கீழ்த்தரமான பெயர்களைத் தெரிவு செய்துகொள்வது ஒருவகையான மனநோய்தான். இவர்கள் போனிலோ அல்லது நேரிலோ அறிமுகம் செய்து கொள்ளும்போது 'ஓதப்புடுக்கன்' என சொல்லாமல் 'அறிவழகன்' என்றுதான் சொல்கிறார்கள்.

* என் அனுபவத்தில், எவனுக்கு அதிகமாக போன் வருகிறதோ அவன் உருப்படாமலும், அதிகம் அவுட்கோயிங் பேசுபவனே முன்னேறியும் கண்டிருக்கிறேன்.

* உன்னளவில்தான் நாங்கள் அடிமைகள். பெயர்த்தெடுத்த பெருங்கற்களை உன் தலையில் போடுவதை ஒத்தி வைப்பதன் மூலம் மேலதிகமான ஒருநாளை வழங்கும் கடவுளர் யாம்!

* அயோக்கியனாகக் கூட இருந்துவிட்டு போ! ஆனால், யோக்கிய சிகாமணி போல சுயகற்பிதம் செய்துகொண்டு இம்சையை கூட்டாதே...! # அறிவுரை

* கலைஞனுக்கில்லை கட் ஃஆப் டேட்!

*  ‘ஸ்ரீ ராமராஜ்யம்’ பாடல்கள் கேட்டால் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே...! - ராஜா சார் ராக்ஸ்!

* செந்தமிழ் தேன்மொழியாள்... நிலாவென...கேட்டுக்கொண்டிருக்கிறேன்; இவ்வளவு அருமையான இசையை இளையராஜா சாரினால்தான் உருவாக்கியிருக்க முடியும்.

* திரு: உப்புமா சாப்பிட்டு போங்க...! நான்: சொன்ன சொல்லே உணவாய் உண்டேன்...!

* விஜய்க்கு 17 வயசு இருக்குமான்னு அக்‌ஷய்குமார் கேட்டாராம்; இப்பதான் தெரியுது இவன் ஏன் பிக்கப் ஆகலன்னு!

* சிஎஸ்கேவின் வர்ணனைகளைப் பார்க்கும்போது மதுமிதா என்பவர் ஓபரா வின்ப்ரே போல இருப்பாரென நினைக்கிறேன்.

* யாரும் என்னை புகழ வேண்டாம்; என் கணிப்புகளின் வெற்றி விகிதம் 98%. மீத 2 சதவிகிதத்திற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறேன் # அவையடக்கம்

* சூப்பர் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படுவது போல, மொக்கைகளுக்கு மங்கிக்குல்லாய் வழங்கப்படும் # நான் ஐபிஎல் சேர்மன் ஆனால்

* தற்சமயம் வீரர்களின் நெற்றி காலியாகத்தான் உள்ளது; அதிலும் விளம்பரங்கள் செய்து வருவாய் ஈட்டப்படும் # நான் ஐபிஎல் சேர்மன் ஆனால்

* பவுலர் அண்டர் ஆர்ம் போடவும், ஓரே பேட்ஸ்மேன் ரைட், லெப்ட் என கலந்து ஆடிக்கொள்ளவும் அனுமதி # நான் ஐபிஎல் சேர்மன் ஆனால்

* உள்ளூர் டீம் எதுவும் விளையாட ஆசைப்பட்டா எண்ட்ரன்ஸ் ஃபீஸ் கட்டிட்டு விளையாடலாம் # நான் ஐபிஎல் சேர்மன் ஆனால்

* 80 மீட்டர் தாண்டி அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு 8 ரன்கள் தரப்படும் # நான் ஐபிஎல் சேர்மன் ஆனால்

* இசையில்தான் இளமை பறிபோய்விட்டதே நாம் ஏன் ‘பழைய ராசா’ என்றழைக்கக்கூடாது?!

* சேவாக் என்பவர் 'பரமார்த்த குரு ஸ்கூல் ஆஃப் தாட்ஸினைச்' சேர்ந்தவர் போல.

* சுரைக்காய், சுரைக்காய்னியே சொனை கெட்ட மூளி... விளக்க பொருத்தி மூக்க பாரு... # சிக்ஸர் கேட்ட ரசிகர்களுக்கு கெயில்

* நம்புங்கள்... டேனி மாரிஸன் பைத்தியம் இல்லை!

* இன்று தமிழ் ட்வீட்டுலகம் ஊடகங்களால் கவனிக்கப்படுவது பரிசல் போட்ட பிச்சையினால் என்பதை மறந்துவிட வேண்டாமென பரிசல் ட்வீட்டச் சொன்னார்!

* நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்...உதயநிதி ஸ்டாலினைப் பார்க்கையில் ஜித்தன் ரமேஷ் நினைவுக்கு வரவில்லை?!

* தமிழ் ட்வீட் சூழலைப் பார்க்கும்போது பேசாமல் பிரெஞ்சிலோ, ஸ்பானிஸ் மொழியிலோ ட்வீட்டலாம் போலிருக்கிறது.

* ட்வீட்டரில் வெளியிடும் எனது தொடர்பு எண்களை மகளிர் குறித்து வைத்துக்கொண்டு என்னை அழைத்து தொந்தரவு செய்யவேண்டாம்; நான் கடலை போடுபவன் அல்லன்!

* பட்டப்பகல் வேளையில் அழைத்து 'ஃப்ரீயா இருக்கீங்களா சார்'என உரையாடலைத் துவக்கும் பக்கிகளே...செய்வதற்கு ஒன்றுமில்லாத நாளே என் வாழ்வில் இருந்ததில்லை. ட்வீட்டிக்கொண்டு இருந்திருப்பேன்.

* ஆண் மகவைப் பெற்றெடுத்தார் ராஜஸ்தான் ராயல்ஸின் ஷில்பா ஷெட்டி; இதில் மேட்ச் பிக்ஸிங் ஏதும் இல்லை. நம்புங்கள்!

* ஒரு சேல்ஸ் பெர்சனிடம் டேட்டா ஃபேஸ் கேட்டுத் தொந்தரவு செய்வது அவனை காயடிப்பதற்குச் சமம் # பொதுவா சொன்னேன்!

* திடீரென்று ஒரு பெண் ஃபேஸ்புக்கிலிருந்து ‘டிஸ் அப்பியர்’ ஆகிவிட்டால், நம்ம பயளுக எவனோ வேலைய காட்டிட்டான்னு அர்த்தம்!

* இந்த சுஜாதாவால் அநியாயமாக ஒரு கழுதையின் மானமும் அல்லவா சேர்ந்து போகிறது # மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி

* அழகைப் பற்றிய சுயபிரக்ஞையே அவலட்சணத்தின் முதல் படி! - சிந்தனையாளர் அரங்கசாமி

* ஒரே நோக்கத்திற்காகப் போராடுபவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டால், அது சுயநலக் கனவுதான் என்பது பல்லிளித்து விடுகிறது.

* பிரபலங்கள் பொது இடங்களில் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். பிரபலங்கள் பொது இடங்களில் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

* அரைமணி நேரம் சேர்ந்தார்ப் போல் தொலைபேசி அழைப்பு இல்லாவிட்டால், சரியாக உழைக்கவில்லையோ என்று சந்தேகம் வருகிறது.

* அஞ்ஞாடியை இன்னும் படிக்கவில்லையென்பது சுய அவமானமாக இருக்கிறது. எல்லாச் சிறப்புகளையும் தாண்டி பூமணி மொழிக்குள் குறும்பு செய்யும் கலைஞன். இத்தனை வருடங்களில் அது குறைவு படாமல் உள்ளதாவெனப் பார்க்கும் ஆவல்!

* சுவாமி ஓம்கார் அவர்களைச் சந்திக்க இவ்விடம் அணுகவும். சாதா தரிசனம் ரூ.150/- தட்கால் சேவா ரூ.300/-

* என்ன நினைத்தாரோ பட்டீஸ்வரர் திடும்மென வாடா பார்த்து நாளாச்சி என்று விட்டார். பேரூரில் இருக்கிறேன் # சிவன் எங்கூடயும் பேசுவார்டா...

* சிறை மீண்ட நெஞ்சத்தான் ஆ.ராசாவினை வரவேற்கிறோம்; தற்சமயம் ஆதீனங்கள் எதுவும் காலியாக இல்லாததால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கிறோம்!

* ஓர் உபயோகமற்ற தினத்தின் குற்ற உணர்வினை மிளகு தூவின கோழி சூப்பினால் குறைக்க முடியும்.

* சவம்... நவகவிதையினைப் புரிந்துகொள்ள எழுதிய கவிஞனையும் தனிப்பட்ட முறையில் தெரிந்துவைத்திருக்க வேண்டியுள்ளது!

* சுயவேட்டைக் கறியின் சுடுசுவையே...!

* என் இனிய பெண்ணே, எப்போதும் நினைவில் வை! 'நாம் ஒருபோதும் அவர்கள் அல்ல...!'

* த்ரிஷா கால் கிலோ... தமன்னா கால் கிலோ... காஜல் கால் கிலோ... எல்லாமா சேர்த்துக் கட்டின பெரிய பொட்டலம் பேச்சியம்மா...

* ட்வீட்டர்கள் கூடிப்பேசி... ஜாதிவாரி கணக்கெடுப்பில் ‘ட்வீட்டர் ஜாதி’ என குறிப்பிடும்படி கேட்டுக்கொள்வார்களென்று நினைக்கிறேன்.

* ஒரு பெருநகரத்தில் வாழ்வதென்றால் எவ்வளவு கவனம் தேவைப்படுகிறது. கவனம் தப்பினால் கவளம் தப்பிடும்.

* நான் விமர்சனங்களை வரவேற்க்கிறேன்; ஆனால், ஒருபோதும் அவற்றை ஒத்துக்கொள்ளமாட்டேன் # எழுத்தாளன்டா...!

* ஒரு நாளுக்கு அரைமணிக்கூறெனும் நாளிதழ் வாசிக்கத் துணியாதவனின் தொழில் ஓரங்குலம் கூட நகராது!

* மகா கலைஞர்களெனினும் சிறிதளவு நேர்மைக்குறைபாட்டினைக் கொண்டிருக்கிறார்கள்; ஆக சுவையான கருப்பட்டிக் காபியின் அடி மண்டி போல.

* நம்மைப் பற்றிய நல்லெண்ணம் உருவாகி விடாமல் பார்த்துக்கொள்ள எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது?!

* எவனோ ஒரு மனநோயாளிதான் 5 ஸ்டார் சாக்கலேட்டின் பிராண்டிங் இன்சார்ஜ்! # அப்பாவோட பேண்ட்

* நிகில் முருகனுக்கு இந்தமாதிரி சட்டைகள் எங்கு கிடைக்கின்றன?!

* நாஞ்சில் நாடன் நாவல் எழுத உட்காரும்போது ரெயில்வே டைம் டேபிள், பஸ் டிக்கெட்டுக்கள், ஹோட்டல் பில்களை எழுத்து மேஜையில் எடுத்துவைத்துக்கொள்வாரென அவதானிக்கிறேன்.

* ரொம்பவும் இம்சித்த மலையாளி நண்பனொருவனை இப்படி இகழ்ந்தேன்: ‘உம்மண்சாண்டியவிட கேவலமானவனா இருக்கீயேடா...’

* @oviyaa666 உங்களை எல்லோரும் 'களவாணி' ஓவியா என்றழைக்கிறார்களே...அப்படி எதை திருடினீர்கள்?!

* தன் சல்லித்தனங்களுக்கு இலக்கியத்தில் நியாயம் தேடுபவனால், எழுத்தாளனாக அல்ல... வாசகனாகக் கூட ஆக இயலாது!

* 'என் தங்கம் என் உரிமை' விளம்பரம் லட்சியவாத வகைமைக்குள் வருமாவென ஜெயனிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

* டிசிக்கு வேண்டாத எவனோதான் பார்த்தீவை கோர்த்து வுட்ருக்கான்!

* காடுவெட்டி குருவின் பேச்சை கேட்டேன். ஆதீனமாக அனைத்து தகுதிகளும் உள்ள பேச்சு!

* பாசி நிறுவன ஊழலை முதன் முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து வெண்கலப் பூட்டை போட்டவள்தான் இன்றெனக்கு கோதுமை தோசை சுட்டுத் தருபவள்!

* ஓரேயொரு கீரை வடைக்கு ஒன்பது பேர் போட்டி! # கூடங்குளம்; உம்மன்சாண்டி...

* 'லேய் மாங்குடி...' எனும் விளியை நெல்லை டவுண் ஆசாரிமார்கள் புழங்கக் கேட்டிருக்கிறேன்; மடப்பயலே என்று அர்த்தமாம்! இப்போது புழக்கம் உண்டா?!

* மதுரை ஆதீனத்திற்க்கும் எங்கள் வடவை ஆதீனத்திற்க்கும் உள்ள ஓரே வித்தியாசம்: கிரீடத்திற்க்குப் பதிலாக ஹெல்மெட் அணிந்திருப்பதுதான். # ஓம்கார்

* நீங்கள் தூசிகளையே கவனித்துக்கொண்டிருந்தால், மூச்சு விட சிரமப்படுவீர்கள்!

* இரு பைக் பண்பாளர்கள் காலையிலேயே சாலையில் மோதிக்கொண்டனர்; 'மாதா,பிதா,குரு வைவோம்!'

* உங்க பேப்பர்ல விளம்பரம் கொடுத்தேன்;ரெஸ்பான்ஸே இல்ல-அஞ்ஞானி; ரெஸ்பான்ஸ் வரல... விளம்பரத்துல ஏதோ பிரச்சனை - விஞ்ஞானி

* காற்றாலை ஓடி மின்வெட்டு நீங்கியது என மகிழ்பவன் அஞ்ஞானி; பருவம் மாறி காற்றடிக்கிறதேயென யோசிப்பவன் விஞ்ஞானி!

* போக்காளன் என்னத்த திம்பானோ... நிலையழிஞ்சி நிக்கானே... # கெயில்

* கெயில் விளையாடும்போது இந்திய விமானங்கள் பறக்கத் தடை!

* ஆனால், நாளையே இளையராஜா இசையமைக்கும் படத்திற்குப் பாட்டெழுதச் சொன்னால், பெருந்தன்மையோடு ஒத்துக்கொள்வான் இந்த செல்வேந்திரன்!

* லோக்கல் பிராண்ட் கொஞ்சம் பெர்சனலைஸ்டாத்தான் இருக்கும்; சட்டுன்னு மயங்கிறக் கூடாது :) # பொதுவாச் சொன்னேன்

* என் கடைசி முயற்சியாக அறம் சிறுகதை தொகுப்பினை இளையராஜாவிற்கு அனுப்பிவைக்கலாமென்றிருக்கிறேன்.

* சாமி’ என்ற வார்த்தையை முதலில் இளையராஜாவிடம் எவன் பிரயோகித்தானோ அவனே அவரது முதல் குழியை வெட்டியவன்.

* வானத்தின் கீழ் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதென்று எதுவுமில்லை! அறிவுதளத்தில் நிகழ்கிறதா என்பதை மட்டும் கணக்கில் கொள்ளுதல் வேண்டும்.

* டெக்கான் க்ரானிக்கலுக்கும், டெக்கான் சார்ஜஸூக்கும் தரத்தில் ஒரு வித்தியாசமும் இல்லை.

* தமிழ் சினிமாவில் மகேஸ்வரி என்றொரு மொக்கை நடிகை இருந்தார்; கிரிக்கெட்டிற்க்கு அதுமாதிரி பார்த்தீவ் பட்டேல்!

* நான் மட்டும் எழுத்தாளனாக இல்லாமல் இருந்திருந்தால் ட்வீட்டரில் பலரைப் பின்தொடர்ந்திருந்திருப்பேன்.

* தினமலரில் டவுட் தனபாலு எழுதுவது மனுஷ்யபுத்திரனா என்று ஒரு நண்பன் போனில் விளிக்கிறான் # கிருத்தாளம் புடிச்ச பயலுகய்யா...

* தங்கள் தோப்பில் பறித்த இளநீர் குலைகளை ஒரு வாசகி வீடு ஏகி தந்துச் செல்கிறார். மொழி வளர்ச்சிக்கு என்னமா பாடு படுகிறார்கள்?!

* யாமறிந்த பதிவரிலே பரிசல் போல் பண்பாளன் எங்கும் காணோம்னு திரேஸ்புரம் அருமை நாயகம் அண்ணாச்சியே சொல்லிருக்காருல்லா...

* நாஞ்சில் துபாயிலும் தின்பதைப் பற்றியே பேசினார் என்பதை நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது.

* அபிலாஷ் கிரிக்கெட் பற்றி என்னமா எழுதுகிறார்?! அவருக்கு மட்டும் கிரிக்கெட் பற்றி ஏதாவது தெரிந்திருந்தால், இன்னும் எப்படியெல்லாம் எழுதுவாரோ?!

* போலியான ஆவேசத்துக்கு கொஞ்சமும் குறைவுபடாதது மிகையான தன்னிரக்கம். பின்னதற்கு முன்னது பரவாயில்லை.

* சமகால இளைஞிகளின் ரசனைமட்டம் சற்று குறைவுபட்டுள்ளது என்பதை என்னைக் காதலிப்பதாகச் சொல்வதிலிருந்து தெரிந்துகொள்கிறேன்.

* 150 மிலி லிக்யூட் ஃபாரபின் குடித்துக் கொண்டிருக்கிறேன் # அன்னபூர்ணா காஃபி

* ஒரு வாசல் மூடி மறுவாசல் திறப்பான் இறைவன்; அதற்காக அவரை கேட் கீப்பராகவே பயன்படுத்தக்கூடாது.

* யாரும் ஷேர் பண்ணாத ஓவியமே... டேக் பண்ணினால் நாறிடுமே... என் புரொஃபைல் பிக்சர் ஆனாய்... நான் ஆபீஸ் மிக்ஸராய் ஆனேன்... # தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கும் பாடல்

* ஆயிரம் பேர் ரீ ட்வீட் செய்த அழகியே...' # த.சினிமாவில் எதிர்பார்க்கும் வரிகள்

* டைம் லைனில் நான் காத்திருந்தேன்... உன் 'ட்வீட்' வந்ததும் பூப்படைந்தேன்... மென்சன் போட்டு ஒரு முத்தம் தா... டி.எம்-ல் மொத்தம் தா! # த.சி.எ.பா

* ஏ.டி.எம் சென்டரைப் பூட்டிப் புழங்குகிற நகரம் என்னுடையது; காலை 10க்கு திறந்து மாலை 5க்கு சாத்தி விடுகிறார்கள் # சாத்தான்குளம்

* தனித்திருக்காதே; பசித்திருக்காதே; விழித்திருக்காதே!

* *ல்வினை உகுத்து வந்து பால்வினை ஊட்டும்! # ஆபாச ட்வீட்

* பெண்களிடம் சாட்டும்போது மட்டும் எப்படி இப்படியொர் கனலும் கவித்துவம் வந்து ஒட்டிக்கொள்கிறது?! # வியப்பு

*

Comments

Prabu Krishna said…
* ஆண் மகவைப் பெற்றெடுத்தார் ராஜஸ்தான் ராயல்ஸின் ஷில்பா ஷெட்டி; இதில் மேட்ச் பிக்ஸிங் ஏதும் இல்லை. நம்புங்கள்!//

:-) :-)
ஒன்றிரண்டுதான் தேறுகிறது. எதேச்சதையாகப் பார்த்தால் அவையும் என் பெயர் இருப்பதால்தான் தேறியிருக்கிறது என்பது தெரிகிறது...
செல்வா - இதற்கு முன் போட்ட கமெண்ட் முந்தைய போஸ்டுக்கு. இதில் வெளியிட வேண்டாம். நன்னி ஹை!

Popular Posts