ஈராறுகால் கொண்டெழும் மந்தி!


* கோட்டிக்காரத்தனமெனினும் மனம் ஒப்பி செய்தால் அதற்கென்று ஒரு விலை இருக்கத்தான் செய்கிறது!

* உற்றுப் பார்க்காதே... ஒற்றுப்பிழை தெரியும்.

* ஆத்தங்கரை மரமே... அதில் உறங்கும் குரங்கே...# இளவெயினி ராகங்கள்

* ஒரு சிந்தனையாளனாக காலம் தள்ளுவது நீங்கள் நினைக்கிற அளவிற்கு சுலபமானது அல்ல.

* நிர்மலா பெரியசாமிக்கு ஏன் இன்னும் மகாசேசே விருது வழங்கப்படவில்லை?!

* முறுக்கை எண்ணெயில்தானே பொரித்தெடுக்கிறார்கள்; பிறகேன், முறுக்கு 'சுடுகிறேன்' என்கிறார்கள்?!

* எங்கள் வழவில்... கிடக்கும் டயரில்... தங்காமல் நீ ஓடு கொலைகார கொசுவே... டெங்கே அடங்கு... டெங்கே அடங்கு # சங்கே முழங்கு!

* நல்லவனாய் இருப்பதை விடவும், நடிப்பதை விடவும், நல்லவனைப் போல ட்வீட்டுவது கடினமாக இருக்கிறது.

* கேஜ்ரிவாலை ஏதேனும் ஏஜென்ஸி அணுகி விளம்பரப்படங்களுக்கு நடிக்க வைத்தால் செம மைலேஜ் கிடைக்கும் # பிரகலாத் ஹால்கர்/அல்வின் சல்தானா கவனத்திற்கு...

* என் ஓவியங்கள் விற்ற பணத்தில் சல்லி நயாப் பைசா கூட சாரிட்டிக்கு வழங்கப்பட மாட்டாது என உறுதியளிக்கிறேன்.

* ச்சே..கவிதைன்னா வாசிச்சதும் நாண்டுக்கிட்டுச் சாகலாம்னு தோணனும்கிற எளிய விஷயம் கூட தெரியாத மண்டூகங்களின் மத்தியில் கவிஞனாக வாழ்வது கடினம்.

* பட்டம் விடுவது, மீன் பிடிப்பது, பப்புள்ஸ் விடுவதைப் போலவே ஈகிள் துப்பாக்கியில் ரோல் கேப் வெடிப்பதும் பெரிய ஸ்ட்ரெஸ் ரிலீஸாக இருக்கிறது.

* பள்ளி ஞாபகங்களைப் போல நெஞ்சடைக்கச் செய்வது வேறேதுவும் இல்லை.

* மனுஷ்யபுத்திரன் ட்வீட்டரில் இல்லை என்பதே பெரும் ஆறுதலாக இருக்கிறது.

* திரு போனில் யாரிடமோ இரைந்து கொண்டிருந்தாள் 'pizza can be delivered in time, people who wants to be unique can wait for creativity'. வாஸ்தவம்தான்.

* கிறுக்கன்களுக்கு தனி நாடும், ஆயுத பலமும் கிடைத்தால் இப்படித்தான் நடக்கும் # இஸ்ரேல்

* சிலபஸ் நல்லா இருக்கான்னு பார்க்கும்போதே ஸ்கூல் பஸ்ஸூம் நல்லா இருக்கான்னு பாருங்க...

* மசகலி, வசகலி போன்ற கொசுவலை சுடிதார்களால் டெங்கு மட்டுப்பட்டிருக்கிறாவென விசாரிக்க வேண்டும்.

* மனசு நினைக்காததையும் சமயங்கள்ல நாக்கு சொல்லிடும். ஃப்ளோவா வருதுன்னா ஸ்லோவா ஆயிடனும். இல்லன்னா சிக்கல்தான்.

* பூ மலர்வது இரவுக்குத் தெரியும்... கவி மலர்வதை இதயமும் அறியும்.

* பெரும்பாலான நாடோடி கதைகளை கம்போடியா என்பவர்தான் எழுதியிருக்கிறார்.

* ஒருவன் உலகின் ஜனங்களையெல்லாம் ஃபாலோயர்ஸ் ஆக்கிக்கொண்டால், அதனால் அவன் அடையும் லாபம் என்ன?! ஒன்றும் இல்லை. ஆமென்.

* ஒரு மணி நேரமாக வானம் கிழிந்து பெய்கிறது. பன்சிட்டி மாலில் மாட்டிக்கொண்டு முழிக்கிறேன். நல்ல வேளைக்கு கவிஞன் எவனும் அருகில் இல்லை.

* பெத்து எடுத்தவதான் என்னையும் மொத்தி எடுத்துப்புட்டா... # இளவெயினி சோகங்கள்

* கலையால் கைவிடப்பட்ட கண் சோர்ந்த முதுமையில் அய்யோ என்னைக் கவனியுங்கள்..கவனியுங்கள் என கண்ணெதிரே ஒருவன் தேய்ந்தழிவது எத்தனை துயர் மிகுந்தது?

* ஏன் இன்னமும் கோணங்கியின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கிறது?!

* நாகஸ்வரமும், தவிலும் ஒலிபெருக்கி தேவைப்படாத வாத்தியங்கள் என்பதை எப்பத்தாம்யா தெரிஞ்சுக்கப் போறீங்க?!

* நான் பிஸ்கட்டும்,முறுக்கும் போட்டு போஷித்த கருவாயனை நேற்று சின்மயா நகரில் ஒரு செவளையோடு பார்த்தேன்; வீட்டோடு நாயா போயிட்டான் போல!

* இந்த உலகம் என்னைப் பின்தொடர்வது என் உயர் கவித்துவத்திற்காக, தத்துவத்திற்கா,மொழிநடைக்கா அல்லது ஓவியங்களுக்கா?! குழப்பமாக இருக்கிறது.

* நம்பு; இல்லையெனில் வம்பு.

* சாமிக்கே பாக்கெட் பால். பூசாரிக்குப் பண்ணைப் பாலா?!

* இரையாதே; இரையாகாதே!

* தூங்கும்போது கூட காலை ஆட்டிக்கிட்டு இருக்கணும்; இல்லன்னா 'மண்டய போட்டுட்டான் மடப்பயல்னு' ஸ்டேட்டஸ் போட்ருவானுக! கொள்ளைல போவாணுவோ...!

* ஆடி போனா ஆவணி... தேடிப் போயி சாதி நீ!

* நாட்டு மக்களுக்கென தினமும் ஏதாவது சொல்லாவிட்டால் நமநம என்றிருக்கிறது. தேசத்திற்கு இன்றைய செய்தி ‘உழைத்துயருங்கள்’

* உரிய கிரெடிட் கொடுக்காமல் ஒருவனின் ஐடியாக்களைத் திருடுவது பொன்முட்டையிடும் வாத்தை பொரித்து தின்பதைப் போல.

* பொய் சொன்ன வாய்க்கு போஜனமும் கிடையாது; போண்டாவும் கிடையாது!

* ”எனது பாடலை நதியில் இறக்கி விட்டேன்...அது உன் காலடியை வந்தடையட்டும்”னு கவித்துவமா மெஸெஜ் அடித்தேன்; ரிப்ளை: நதியை மாசுபடுத்தாதே!

* கவிதைகள் கொஞ்சம் ஏப்ப சாப்பையா இருந்தாலும்... அதுக்கு செலக்ட் பண்ற இமேஜஸ்ல நம்மளை அடிச்சுக்க ஆளே இல்லை.

* சாய்ந்து... சாய்ந்து...சைக்கிள் ஓட்டும்போது... அடடா... ஹேய்ய்ய்ய்....

* கூகிள் கூகிள் பண்ணிப்பார்த்தேன் ஒலகத்துல... எங்கம்மா போல டார்ச்சர் கேஸூ எவளும் இல்ல... # இளவெயினி ராகங்கள்

* நீர்ப்பறவையில் லூர்து சாமி, அருளப்ப சாமியென பல சாமிக்கள் வருகிறார்கள். அரங்கசாமியும் வந்திருந்தால், முழுமையான கலைப்படைப்பு ஆகியிருக்கும்.

* ஓரெயொரு ஊரிலே... ஓரெயொரு குட்டிம்மா... குட்டிம்மாக்கு பிடிச்சதெல்லாம் ரெண்டு சட்டி உப்புமா...# கடந்த நிமிடத்தில் இயற்றிய குழந்தை பாடல்.

* புரொபைல் பிக்சர் மாத்துனதும் ஃபர்ஸ்ட் லைக் எவன் போடுறானோ அவன்தான் பாப்பாவோட பாய் ஃப்ரெண்ட் என யூகிக்கலாம்.

* ஜவுளி வாங்கினதுக்கு ஒரு காலண்டர் கொடுத்தான் ஶ்ரீதேவில. 'ஏம்பா...கிங் ஃபிஷர் காலண்டர்லாம் தர மாட்டீங்களா...' திரு என் குமட்டில் குத்தினாள்.

* ஹவுஸ் ஓனர்களின் உளவியல் சித்திரவதைகளுக்குப் பயந்து செய்து கொள்ளும் தற்கொலையே ஹவுஸிங் லோன்!

* காதலை எதிர்ப்பதற்கு முன் அரசியல்வாதிகள் அவரவர் பிள்ளைகள், பேரன், பேத்திகளின் காதல் விவகாரங்களைப் பைசல் செய்துவிட்டு வரவும்.

* நடுவுல கொஞ்சம் ஸ்டெம்ப காணோம் # சேவாக்,சச்சின்

* படத்துக்கு பாட்டே பரவாயில்லையெனும் பொது அபிப்ராயத்தை உருவாக்கி ராஜாவை மீட்டெடுத்த மேனன் என நீ இன்று முதல் புகழப்படுவாய்...! # நீஎபொவ

* அம்பார பாக்குல ஒரு பாக்கு என் பாக்குன்னானாம்...

* ஃபெமினா தமிழ்ப் பதிப்பின் ஓரே குறைபாடு அது தமிழில் இல்லாததுதான்.

* 'எதிர்பாரா விருந்தாளி' எனும் பதமே செல்போனால் ஒழிந்து விட்டது.

* டிசம்பர் 31ம் தேதிக்குள் ஏதாவது கெட்டப் பழக்கமொன்றை கற்றுக்கொண்டாக வேண்டும். இல்லையெனில் ஜனவரி ஒன்றாம் தேதி கையறு நிலையாகிவிடும்.

* விண் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் 'யாதவர்களே... யாதவர்களே...' எழுச்சிப் பாடல், ராஜா சார் இசையமைத்ததா?!

* தூங்காத எலிகள் ரெண்டு... தவறாமல் உதைகள் உண்டு... # இளவெயினி ராகங்கள்

* நண்பர்களே...நெய் மீன் என்பது அசல் நெய்யினால் செய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை நீங்கள் இன்றாவது தெரிந்து கொள்ள வேண்டும்...

* சிந்திச்சு பார்த்து... சேனலை மாத்து... சிறுசாய் இருக்கையில் மாத்திக்கோ... மொக்கை சிறுசாய் இருக்கையில் மாத்திக்கோ...!

* இந்த கிறிஸ்மஸ்நாளில் எனது ஹார்வர்டு நாட்களை நினைத்துக்கொள்கிறேன்;ரெண்டு செட் ஜூனியரான ஸக்கர்பெர்க் கேக் எடுத்துக்கொண்டுஹாஸ்டலுக்கே வருவான். மெரி கிறிஸ்மஸ்!!!

* அகார்கர், சஞ்ஜெய் பாங்கர், ஜோஹிந்தர், டிண்டா - ஒரே பவுலருக்கு எதற்கு நான்கு பெயர்கள்...?!

* வீட்டு டிவில ரோஹித் சர்மாவை பார்க்கும்போதெல்லாம் சச்சின் கை தட்டி சிரிக்காராம்ல...?!

* அன்சுல் மிஸ்ரா பிறந்த ஊரின் தண்ணீரை என் பிள்ளைக்கு கொடுத்து வளர்க்க ஆசைப்படுகிறேன்.

* புத்தகத்தைக் கொடுத்து உஷார் பண்ண ஒருபோதும் எண்ணாதே! புத்தகம், நட்பு இரண்டையும் இழப்பாய்! - ஜென் குரு மசானமுத்து

* திருவாதிரை நாள் ஒருவாய் களியுண்ண வழியில்லை... பன்னிருகை கோலப்பா... கொண்டாப்பா ஒரு ஜிகர்தண்டா!

(நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிந்தித்து இந்நாட்டு மக்களுக்கு அருளிச்செய்த ட்வீட்டுரைகளின் தொகுப்பு. வாழ்வு வளம்பெற... எண்ணியவை ஈடேற... நாள் தவறாமல் பாராயணம் செய்யுங்கள்...!)

Comments

ரொம்ப பெருசா இருக்கு பாஸ் போஸ்ட்டு. அப்பப போடுங்க, படிக்கவும் ரசிக்கவும் சவுகரியமா இருக்கும்.
தலைப்புக்கு விளக்கம் ப்ளீஸ்...
ஏன் இன்னமும் கோணங்கியின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கிறது?!

என்னை பலமுறை உறுத்திய விஷயம். சபாஷ்!

உரிய கிரெடிட் கொடுக்காமல் ஒருவனின் ஐடியாக்களைத் திருடுவது பொன்முட்டையிடும் வாத்தை பொரித்து தின்பதைப் போல.

நாமறிந்தவரை தமிழ் இயக்குனர்களூக்கு ஒரு சிறந்த பழமொழி!

எதிர்பாரா விருந்தாளி' எனும் பதமே செல்போனால் ஒழிந்து விட்டது

ஆழ்ந்த சிந்தனை!
shri Prajna said…
அடிச்சுக்க முடியாது..அடிச்சுக்க முடியாது.. ரொம்ப நன்னாருக்கு..

Popular Posts