இலக்கிய வெறி

எல்லோர்க்குமான
கவிதையொன்றினை எழுதிடும்
முனைப்பு கொண்டேன்.

சொற்கட்டு
ஓசை நயத்தோடு
வார்த்தைச் சிக்கனத்தையும்
வசீகர சப்-டெக்ஸ்டுகளையும்
மனதிற்கொண்டேன்.

அழகியலும் முக்கியமல்லவா
உறுமீன் கொக்கைப் போல
வார்த்தைக்கு தவம் இருந்தேன்
சமூக பிரக்ஞையும் வேண்டும் என்றது மனசாட்சி

‘கொசுக்களின் இருப்பிடம்
நோய்களின் பிறப்பிடம்”
என்பதாக கவிதையை முடித்தேன்.

Comments

Anonymous said…
//சொற்கட்டு
ஓசை நயத்தோடு
வார்த்தைச் சிக்கனத்தையும்
வசீகர சப்-டெக்ஸ்டுகளையும்
மனதிற்கொண்டேன்.

அழகியலும் முக்கியமல்லவா
உறுமீன் கொக்கைப் போல
வார்த்தைக்கு தவம் இருந்தேன்
சமூக பிரக்ஞையும் வேண்டும் என்றது மனசாட்சி//

எழுதும் முன் தோன்றும் எண்ணமும் கவிதையாய்...முடித்தவிதமும் அழகு செல்வா..
Ashok D said…
//எல்லோர்க்குமான
கவிதையொன்றினை எழுதிடும்
முனைப்பு கொண்டேன்.//

எல்லோர்க்குமான கவிதையென்று சொல்ல முடியாது.. இது என்னை போன்ற சிறுவர்களானது என்று மட்டும் சொல்வேன் செல்வேன் ;)
vaanmugil said…
இன்னும் எதிர் பார்கிறேன்....
’முடியலத்துவம்’ தலைப்பு ரொம்பப் பொருத்தம்ங்ணா! உண்மையிலேயே கொசுக்கடி தாங்கமுடியாமத்தான் இந்தக் கவிதையை எழுதியிருக்கீங்கன்னு தெரியுது. இப்படி நீங்க நிறைய முடியலத்துவம் படைக்க ஆண்டவன் உங்களை ரொம்பச் சோதிக்கட்டும்! :)

Popular Posts