ரமேஷ் வைத்யா

தமிழ் சினிமாவில் நா. முத்துக்குமார் இருக்கிற இடத்திற்கு நிகரான இடத்தைப் பிடித்திருக்க வேண்டியவர் ரமேஷ் வைத்யா. குறைந்த பட்சம் ஒரு பத்திரிகையில் பொறுப்பாசிரியர் அளவிற்காவது உயர்ந்திருக்க முடியும். அதற்கான அத்தனைத் தகுதிகளும் அவரிடத்தில் இருந்தது, இருக்கிறது. குடியினால் குடும்பம், ஆரோக்கியம், வேலை, சேமிப்பு என அனைத்தையும் இழந்த பின்னும் நாவில் சரஸ்வதி எழுதிய தமிழ் இருக்கிறது. உலகை வெல்ல தமிழ் போதும் என்கிற நம்பிக்கையை பாஸ்கர் சக்தி விதைத்திருக்கிறார். அவரது தொடர்ந்த வற்புறுத்தலின் பேரில் குடிப்பழக்கத்திலிருந்து மீளூம் சிகிச்சையை அடையாறு மருத்துவமனையில் பெற்று வருகிறார். அரை இட்லியிலிருந்து மூன்று இட்லிக்கு முன்னேறி இருக்கிறார். தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது.

துரோகமும், புறக்கணிப்புமே வாழ்வின் மீதான அவநம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அருகிலிருந்து கவனித்துக்கொள்ள நபர்களில்லை. மீண்டும் அவரை தனிமையும்,வெறுமையும் சூழ்கிறது. தனிமை என்னை வதைக்கும்போது குடி எண்ணம் மீண்டும் தலை தூக்குகிறது என்கிறார். சாப்பாடு, பழங்கள் வாங்கி வர... உடனிருந்து கதைக்க... துணை இல்லாத ஆஸ்பத்திரி தினங்கள் எத்தனை இரக்கமற்றது?!

மரணத்தை விட கொடுமையானது மறக்கப்படுவது என ஒரு நேர்காணலில் மம்மூட்டி சொன்னது நினைவுக்கு வருகிறது. வேலையில் இருந்தபோது கொண்டாடிய நண்பர்களில் பலரிடம் இருந்து தொலைபேசி குசல விசாரிப்புகள் கூட இல்லை என்பது எத்தனை சோகம்?! பதிவர்கள் அவருக்கு எப்போதுமே பிரியமானவர்கள். பிரியமானவர்கள் மட்டுமில்லை நெருக்கடி தருணங்கள் பலவற்றிலும் உதவியவர்கள். அவர்களில் பலர் அவரை நேரில் பார்க்காததற்கு அன்றாடங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகள் மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஒரு வார இறுதியை அவருக்காக ஒதுக்குங்களேன். ப்ளீஸ்!

Comments

போன் மாறுனதுல அவர் நம்பர் எங்கிட்ட இல்லை!

கொடுங்க அடிக்கடி போன் பண்ணி பேசுறேன்!
செல்வா,

அவர்கள் அனுமதிக்கும் நேரம் சிக்கலாய் இருக்கிறது.

இனி அடிக்கடி நண்பர்களுடன் சென்று சந்திக்கிறேன்.
நான் பலமுறை அழைத்தேன். பாஸ்கருடன் செட்டில் இருந்திருப்பேன் என்றார். பிறகு இரண்டு தினங்களுக்கு முன் தண்டோராவிடம் சொல்லி அவருக்கு என் கண்டனங்களைச் சொல்லச் சொன்னேன்.. என்னை அழைக்காததற்கு. அப்போதுதான் அவர் டீ அடிக்‌ஷன் செண்டரில் இருப்பதாய்ச் சொன்னார். மீண்டு, மீண்டும் வரும் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்.
நண்பரும் எழுத்தாளருமான எஸ்.சங்கரநாராயணன் மூலம் நண்பர் ரமேஷ் வைத்யா, மருத்துவமனையில் சேர்ந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டேன். மிக இனிய நண்பர் அவர். நான்தான் நண்பர் என்கிறேன். அவர் என்னைத் தன் அண்ணன் என்றேதான் சொல்லிக் கொள்வார். அவர் குடிப்பழக்கத்திலிருந்து விரைவில் மீண்டு, வாழ்க்கையில் உயர் நிலையை அடைய நான் வணங்கும் அன்னையை மனதாரப் பிரார்த்திக்கின்றேன்.
//மரணத்தை விட கொடுமையானது மறக்கப்படுவது//

முகத்தில் அடிக்கும் உண்மை....
thodarpu kolla muyarsiththeen.

"switch off" la irukku

piRaku muyarsikkireen.

nanri nanba.
ரமேஷ் வைத்யா அவர்கள் சிகிச்சை மேற்கொள்வது கேள்விப் பட்டு மிக்க சந்தோஷம். மிக விரைவில் குணமாகி வர ஆண்டவனை வேண்டுகின்றேன்.

என்னோட தனிப்பட்ட மெயிலுக்கு அவரின் தொலைப் பேசி எண்ணை தெரிவியுங்களேன். நான் பேசுகின்றேன்.

raghavannigeria@gmail.com
எந்த மருத்துவமனையில இருக்காரு? இன்னும் எத்தன நாள் அங்க இருப்பாரு? நான் இந்த வாரம் சென்னை போறன், நேரம் அனுமதிச்சா நிச்சயமா பார்க்கிறேன்
அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் ,பார்த்ததில்லை.விரைவில் மீண்டு வரட்டும்.
மிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிக வருத்தமாக இருக்கிறது.

அங்கே விஸிட்டர் நேரக் கெடுபிடிகள் வேறு..இரண்டுமுறை திரும்ப நேர்ந்தது.

தொலைபேசிப் பேச்சு அவருக்கு ஆறுதல்.
எனது விருப்புக்குரியவர் மீண்டு வருவதில் மகிழ்ச்சி. செல்வா, அவருடைய தொலைபேசி எண் தரமுடியுமா? நேரில் வந்து பார்க்க முடியாத் தொலைவில் இருக்கிறேன். குரல்மூலமாவது பேசுகிறேன்.
mrishanshareef@gmail.com
அனுப்பிவையுங்கள் !
காமெண்ட் டெஸ்டிங்
நல்ல பதிவுக்கு இன்னும் கருத்துக்கள் வராததால் தான் சோதனை...
kalapria said…
ரமேஷிடம் என் அன்பைச் சொல்லுங்கள் அவருக்கு எல்லாம் சரியாகி விடும் நான் பேசுகிறேன்
Karthik said…
என்னது??? :((
:-(((

அவரை தொலைபேசியில் பிடிக்கமுடியுமாயின், எண்ணைக் கொடுங்களேன்... (chinnappaiyan@gmail.com)
butterfly Surya said…
செல்வா, விசிட்டிங் நேரத்தால் சற்று சிக்கல்.

அண்ணன் மணிஜீ அடிக்கடி சென்று பார்த்து வருவதாக அறிந்தேன். நானும் தொலை பேசினேன்.

கண்டிப்பாக செய்வோம்.
ரவி said…
என்னுடைய மின்னஞ்சலுக்கு அவரது தொலைபேசி எண்ணை அனுப்ப முடியுமா ?

ravi.antone at gmail.com
selventhiran said…
வால், முரளி, பரிசல், ரவிப்ரகாஷ் சார், கார்க்கி, பித்தன், மண்குதிரை, ராகவன், சிவா, ஸ்ரீ, நர்சிம், ரிசான், அப்பாவி, கலாப்ரியா, கார்த்திக், சின்னப்பையன், சூர்யா, ரவி வருகைக்கும் அன்பிற்கும் நன்றி.

Popular Posts