காற்றும் கவிஞனும் மரிப்பதில்லை

ஒரு கன்னி முயற்சியாக நண்பர் கந்தசாமி நாகராஜன் 'சித்திரம்' கையெழுத்துப் பத்திரிக்கை ஆரம்பித்தார். அது ஒரிரு பொதுநூலகங்கள், மர்காஷிஸ் கல்லூரி நூலகங்களில் மட்டும் வாசிக்க கிடைக்கும் மாதப்பத்திரிக்கை. அதில் 'உலக கவிதைகளை' அறிமுகப்படுத்தும் நோக்கில் காற்றும் கவிஞனும் மரிப்பதில்லை' என்ற பெயரில் மாதாமாதம் தொடர் கட்டுரைகள் எழுதினேன். பாப்லோ நெருடாவிலிருந்து கலாப்ரியா வரை நான் ரசித்த கவிதைகளை எவ்வித மிகை உணர்ச்சியும் இன்றி எளிய தமிழில் எழுதியதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. உள்ளூர் வாசகர் வட்டத்தில் மட்டுமன்றி, கல்லூரி மாணவர்களாலும் விரும்பி வாசிக்கப்பட்டது அந்த தொடர். பல்வேறு காரணங்களால் பின்னாளில் சித்திரம் நின்றது.

தமிழ் வாசகர்களுக்கு நல்ல கவிதைகளையும் கவிஞர்களையும் சுஜாதா தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். சுஜாதா முத்திரை பெற்ற கவிஞர்கள் சோடை போனதில்லை. அவர் மூலமாகதான் நான் பல கவிதைகளைத் தெரிந்துகொண்டேன். நான் ரசித்த சில கவிதைகளை உங்கள் பார்வைக்கு எவ்வித விமர்சனமும் இன்றி தினம் ஒன்றாகத் தர இருக்கிறேன். இந்த வாரம்

ஆத்மாநாம்

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்என்றார் ஒரு பேரறிஞர்.
நான் சொன்னேன்நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசியப் பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்

Comments

Popular Posts