தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது - 2013


தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது - 2013
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் இயல் விருது இவ்வருடம் (2013) திரு சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.இவர் தமிழ் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலர் ஆவர்.இந்த விருதைப் பெறும் 14வது எழுத்தாளர் இவராகும். இதற்கு முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன்  போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தாரபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில்முதுலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாக சுற்றுற்சூழல் பற்றியும், சினிமா பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மைபதிப்பகம்  ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக(2006)’, தாமரை பூத்த தடாகம் (2008) வானில்பறக்கும் புள்ளெலாம் (2011)  ஆகிய நூல்களைப்பதிப்பித்தது.  உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை                    காலச்சுவடு 2006) என்ற தலைப்பில்மொழிபெயர்த்திருக்கின்றார்.     காட்டுயிர் பற்றி இவர்எழுதிய The Dance of the Sarus (OUP) 1996இல்வெளிவந்தது.  சென்ற ஆண்டு பென்குயின் பதிப்பகம்இவரை தொகுப்பாசிரியராக் கொண்டு The Sprint of the Blackbuck  நூலை 2009  இல் வெளியிட்து.தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராகபணியாற்றியிருக்கின்றார்இயற்கைக்கான உலகநிதியகத்தில் (WWF-India)  அறங்காவலராகஉள்ளார்
1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (Cre-A)  தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடி புலமைமுயற்சியாக கருதப்படுகின்றது.  தமிழ்சினிமா பற்றிய The Eye of the Serpent  நூலுக்காக தேசிய விருதானஸ்வர்ண கமல் விருதை  1997இல் பெற்றார்.இந்நூலின் மொழிபெயர்ப்பு  பாம்பின் கண்  2012இல்வெளிவந்து,  தமிழில் சினிமா பற்றி மூன்று நூல்கள்எழுதியுள்ளார்.    2003இல் தேசிய திரைப்படவிருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராகஇருந்தார்.   .நாசபையின் சார்பில் கென்யாநாட்டில் இரண்டு மாதம் ஆலோசகராகபணியாற்றினார்  போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998 – 2001) பணியாற்றினார். மனைவி திலகாவுடன்  பெங்களூரில் வசிக்கின்றார்,.இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன்உண்டு.
இயல் விருது கேடயமும் 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.

Comments

திரு சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

Popular Posts