அறிவிக்கப்படாத போர்

மும்பையில் அறிவிக்கப்படாத போர் நிகழ்கிறது. இது தேசிய அவமானம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால், பாராளுமன்றத்திலேயே நுழைந்து பட்டாசு வெடித்த சம்பவத்தை விடவா இது பெரிய அவமானம்?! இருபது நபர்களைக் கொண்ட குழு மும்பையைத் துப்பாக்கி முனையில் வைத்திருக்கிறது. நாளது தேதி வரை அங்கங்கே சிறிய குண்டுகளை வெடிக்க வைத்து உயிர்ப்பலி ஏற்படுத்திக் கொண்டிருந்தவர்கள் நேரடி தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நிகழ்ந்துவிட்ட நாச வேலைக்கு ஒரு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்கிறது என்றால் அது வாக்குமூலம் தருகிறது என்று பொருள் அல்ல. 'இதைச் செய்தது நாங்கள்தான். உங்களால் எங்கள் மசுரைக் கூட பிடுங்கமுடியாது' என்று சவால் விடுகிறது என்று பொருள்.
இந்தியா பயங்கரவாத்தை ஒருபோதும் அனுமதிக்காது. பயங்கரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று ஒவ்வொருமுறையும் ஊடகங்கள் நீட்டும் மைக்குகளுக்கு முன் சூலுரைக்கிறார் நமது பாரதப்பிரதமர். பின்பு கூட்டணிக்கும்மாங்குத்தில் ஆழ்ந்து விடுகிறார். மேற்கத்திய நாடுகளில் இதுமாதிரியான அழிச்சாட்டியங்கள் நிகழும்போது தார்மீக காரணங்களுக்காகவோ அல்லது பயம் கருதியோ தங்களுக்குள் ஓன்றுகூடி தீவிரவாதத்தை அழிக்கக் கிளம்பி விடுகிறார்கள். ஆனால் இந்தியாவோ மூன்றுபுறம் கடலாலும் நான்குபுறம் பகையாலும் சூழப்பட்டுள்ளது.
'தீவிரவாதம் குறித்து விரிவாக பேசப்பட வேண்டிய நேரம் இது' என்று என்.டி.டிவியில் யாரோ ஒரு அரசியல்வாதி ஆக்ரோசமாகப் பேட்டியளித்துக்கொண்டிருக்கிறார். ".... டேய் நீங்க விரிச்சதெல்லாம் போதும் ....மூடிகிட்டு இருங்கடா...." என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டிய ஒரு அறுவைச் சிகிட்சை தேவைப்படுகிறது. மதக்குழுக்களின் போர்வையில் தேசமெங்கும் இயங்கும் சில இயக்கங்களை அழித்தொழிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அல்லது ஜெரிமி பெந்தாமின் "பெரும்பான்மையோரின் மட்டற்ற மகிழ்ச்சி" என்ற கோட்பாட்டிற்கு நாமும் வந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.

Comments
Good post! What is that hypothesis?
I couldnt vote in Tamil manam, it shows error. could you please check it?
???
//பெந்தாமின் கோட்பாட்டை விவரிக்கும் தனிப்பதிவு எழுத இருக்கிறேன்.//
நன்றி