கண்ட்ரோல் சியும், கண்ட்ரோல் வியும்

'பாம்புகளுக்கு என்னைப் பிடிக்கும்' என்ற அந்த செய்தியை நீங்களும் வாசித்திருப்பீர்கள். சில்லாயிரம் பேர் படிக்கும் இலக்கியப் பத்திரிகையிலிருந்து பல லட்சம் பேர் படிக்கும் பத்திரிகைக்கு செய்தியைக் கடத்துவது ஒன்றும் புதிதல்ல என்ற போதும் அதற்காக ரீரைட் கூட செய்யாமல் அப்படியே பயன்படுத்தி இருப்பதுதான் என் கோபத்திற்கு காரணம்.
இலக்கியவாதிகளை நேர்காணல் செய்வதில் சுகதேவ், கடற்கரய், மணா போன்ற ஸ்பெஷலிஸ்டுகளுக்கு இணையானவர் தளவாய் சுந்தரம். தமிழ்நாட்டு வெகுஜனப்பத்திரிகைகளில் தமிழிலக்கிய செய்தியாளர்களாகவே அறியப்பட்டவர்கள் இருவர்தான். ஒருவர் தளவாய் அண்ணன் மற்றொருவர் மு.வி. நந்தினி. மு.வி. நந்தினி தற்போது அச்சு ஊடகத்தில் இயங்குவதில்லை என அறிகிறேன். எஞ்சி இருக்கும் இவரும் இப்படி போட்டுத் தாக்கினால் வருத்தப்படாமல் என்ன செய்வது?!
Comments
கன்டென்ட் இல்லாமல் தவிக்கிறார்கள். இந்த வார இதழில் குழந்தை சிவப்பாகத்தான் இருக்கிறது ஏன் பச்சைக் குழந்தை என்று சொல்லுகிறோம் என்று ஒரு ஜோக்குக்கு ஒரு பக்கம் வீனடிக்கப் பட்டிருக்கிறது.
இணையத்தில் பரிசல், அதிஷா, தாமிரா, வெண்பூ போன்ற திறமைசாலிகள் எழுதத் தளம் இல்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எழுத ஆள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். என்ன செய்ய?
கிழஞ்செழியன் hhhhhhhhhhhhhhhhh
இதற்கு என்ன அர்த்தம்?