தல' தப்புமா...?!

ஆழ்வார் மாதிரி படங்கள் தந்த அனுபவத்தில் அஜீத் படங்கள் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனாலும் லோகிததாஸின் கதை, ரிலையன்ஸின் தயாரிப்பு, கணபதியின் நச்சரிப்பு என போதுமான காரணங்கள் இருந்ததால் கிரீடம் பார்த்தேன். தன் மகனை இன்ஸ்பெக்டர் ஆக்கி பார்க்கும் கனவில் நடுத்தர தந்தை ராஜ்கிரண். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இருக்கும் மகனாக அஜீத். எதிர்பாராத விதமாக உள்ளூர் பிரமுகரின் மகனை ராஜ்கிரண் அடித்துவிட கோடியக்கரைக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். உள்ளூர் தாதா வரதனின் பிடியில் இருக்கிறது கோடியக்கரை. வரதனால் தன் தந்தை தாக்கப்படுவதை கண்டு பொங்கி எழும் அஜீத் அவரை மரண அடி அடிக்கிறார். ஒரு தாதாவிடம் மோதியதால் ஒரு நடுத்தர குடும்பத்தின் கனவு சிதைந்ததையும், அவர்கள் படும் அவஸ்தையையும் சொல்கிறேன் பேர்வழி என்று ரசிகர்களையும் அவஸ்தைகளுக்குள்ளாக்கி சொல்லும் படம் கிரீடம்.

தவமாய் தவமிருந்தில் ஆரம்பித்த பொறுப்பான அப்பா, பாசக்கார அம்மா பயணம் ராஜ்கிரண், சரண்யா ஜோடிக்கு இன்னும் முடிந்த பாடில்லை. முன்பாதியில் த்ரிஷாவுடன் காதல் மலரும் த்ராபை காட்சிகளில் ரசிகர்கள் பத்துநாட்களுக்கு முன் வந்த பழைய எஸ்.எம்.எஸ்களை படித்துக்கொண்டிருக்கிறார்கள். வில்லன் அஜய்குமார் தமிழ் சினிமாவில் காலாவதியாகிப் போயிருந்த பி.எஸ்.வீரப்பா ஸ்டைல் வில்லன் சிரிப்பை மீட்டெடுத்திருக்கிறார். அவர் ஆ...வூ என்று கத்தும்போது பயம் வருவதற்கு பதிலாக பரிதாபம் வருகிறது. அந்த அங்கிளுக்கு என்ன பிரச்சனை? என அருகில் இருந்த குட்டிப்பையன் என்னிடம் கேட்டான்.

விவேக்கிடம் மெல்ல வடிவேலின் சாயல் அடிக்கிறதோ?! “அவரது வைரம் பாய்ஞ்ச கட்டை”க்குத் திரையரங்கமே அதிர்கிறது. கோடியக்கரை வீட்டில் தண்ணீர் தொட்டிக்குள் த்ரிஷாவும், அஜீத்தும் தங்கள் திருமணம் குறித்து பேசுவதும் அதை மொத்த குடும்பமும் குழாய் வழியாக ஒட்டுக்கேட்பதும் குபீர் சிரிப்பை வரவழைக்கும் சிறந்த சீன்.
திருவின் காமரா வழக்கம் போல அசத்தியிருக்கிறது. பாடல்களை எழுதிய நா.முத்துக்குமார் முதன்முறையாக இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். எளிய, இயல்பான வசனங்கள். ஒரிரு பாடல்களிலும், சில காட்சிகளின் பிண்ணனி இசையிலும் அடடே போட வைக்கிறார் இசையமைப்பாளர். படம் முழுக்க கண்டபடி மிஸ்ஸாவது கண்டினியூட்டிதான். த்ரிஷாவை வீட்டு வாசலில் மடக்கி பைக்கில் ஏற்றும் சீனில் மழுங்க சேவ் செய்திருக்கும் அஜீத் அவரை கல்லூரி வாசலில் விடுவதற்குள் பத்துநாள் தாடியோடு இருக்கிறார்.
அஜீத் தன் உடைகளில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்தின் இனம் புரியாத சோகம் ஒன்றை எப்போதும் கண்களில் தாங்கியபடி வலைய வரும் அஜீத் க்ளைமாக்ஸில் உண்மையிலேயே க்ரீடம் சூடியுள்ளார். வரதனைக் கொன்று விட்டு கதறி அழும் சீனில் அசத்தி இருக்கிறார். அஜீத்திடம் ஏராளமான நடிப்பாற்றல் இருக்கிறது ஆனால் தரமான இயக்குனர்கள் அணுக முடியாத இமேஜ் வட்டம் அவரது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. இந்த படம் மட்டும் ஓடாவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இளம் இயக்குனர்களுக்கு படம் செய்வதில்லை என அவர் அறிவித்திருப்பதாகக் கேள்வி. பிழைத்துக்கொள்வார்.

சமீப காலமாகத்தான் தமிழ் சினிமா தோல்வியுற்ற மனிதர்களின் கதைகளையும் படமாக்க ஆரம்பித்திருக்கிறது. வெயில் போன்ற படங்களைத் தொடர்ந்து கதாநாயகன் தோல்வியடைந்து, கதை வெற்றியடையும் படம் இது. கொஞ்சம் சகித்துக்கொண்டு ஒரு முறை பார்க்கலாம்.

Comments

அது எல்லாம் இருக்கட்டும்.
எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா?
Anonymous said…
without doubt yet another flop film for ajith,thanks for rajkiran who realy make people sit in theatre otherwise it would be yet another utter flop for ajith!his acting was good though especially the jail secene were he just speaks with his eyes,not to mention the climax really good performance but yet second half is really boring and draging,first of is really good.certain it will run for 50 days in cities...a good story which lacks the screenplay i think!on the whole thala thapurathu kastamthan.........
selventhiran said…
வாங்க அய்யனார் தலைக்கு ஆறுதல்தான் சொல்ல முடியும்.

வருகைக்கு நன்றி அணானி

Popular Posts