கேண்டி - புகைப்படங்கள்

செல்வேந்திரனுக்கு,
இப்படி ஒரு கடிதம் எழுதியாக வேண்டிய அளவிற்கு நீங்கள் அப்படியொன்றும் பிரமாதமாக எதையும் எழுதிவிடவில்லைதான். ஆனாலும், தினமும் உங்களது வலலப்பூவை இரண்டு முறையாவது பார்த்துவிடுவதும், புதிய பதிவுகள் இல்லாதபோது ஏற்கனவே படித்து விட்ட பதிவுகளைப் படிக்கத் துவங்குவதும் தினசரி வழக்கமாகி விட்டது. இந்த வினோத பழக்கம் எப்படி ஏற்பட்டது? எது என்னை உங்களை நோக்கி ஈர்க்கிறது? தீவிரமாக யோசித்தால் தமிழில் எழுதும் ஒரு சிலருக்கே வாய்த்த சுறு, சுறு எழுத்து நடையும், இதழோரத்தில் மெல்லிய புன்னகையை இழையோட விடும் நகைச்சுவையுமாகத்தான் இருக்க முடியும்.

ஆனால், சமீப காலமாக உருப்படியாக எதுவும் எழுதாமல் 'ஓப்புக்குச் சப்பாணி' மாதிரி எழுதி வருகிறீர்கள் என்பதை ஒரு வாசகனாய் என்னால் உணர முடிகிறது. நீங்கள் எதை எழுதினாலும் நன்றாகத்தான் இருக்கிறது என்ற எனது விமர்சனத்தைப் பெரிதாக எடுத்துக்கொண்டு இப்படியே காலம் தள்ளி விடலாம் என்று நினைக்காதீர். குறைந்தபட்சம் 'முடியலத்துவத்தையாவது' மீண்டும் துவங்குங்கள். நான்கு வரிகளுக்குள் நீங்கள் அடிக்கும் நக்கலுக்காகவே விகடன் வாங்கத் துவங்கினேன். இப்போது நிறுத்தி விட்டேன்.

நிற்க, இந்தக் கடிதம் எழுதிய நோக்கத்தையே மறந்து ஏதேதோ பிதற்றுகிறேன். கேண்டி யார்? என்ன செய்கிறார்? அவருக்கும் உங்களுக்கும் காதலா? உண்மையில் கேண்டி என்றொருவர் இருக்கிறாரா? அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. ஆனால் உங்களது கட்டுரைகளில் தவறாது இடம் பிடிக்கும் கேண்டி பாத்திரம் சுஜாதாவின் வசந்தை போல் என்னை பெரிதும் ஈர்க்கிறது. அவர் முகம் காணும் ஆவலைத் தூண்டுகிறது. அவரது ஒரு புகைப்படத்தையாவது எனக்கு தனி மெயிலில் அனுப்பி வைப்பீர்கள் என்று நம்புகிறேன். அனுப்பத் தவறினால் ஏதேனும் ஒரு அதிகாலையில் உங்கள் அறைக் கதவைத் தட்டுவேன்.
- கே. க்ருஷ்

கோபால கிருஷ்ணன் என்பதை கே. க்ருஷ் என்பதாக சுருக்கிக் கொண்டு ஹைதரபாத்தில் 'கணிணி நோண்டியாக' பணியாற்றும் இளையான்குடி தமிழர் அனுப்பிய ஈ-மெயில். அடிக்கடி என்னை மிகையாகப் புகழ்ந்து அவர் அனுப்பும் இமெயில்களுக்கு பொறுப்பாக பதில் எழுதுவேன். பின்னே... நம்ம எழுத்தையும் ஒருத்தன் ரசிக்கிறாரென்றால் ச்சும்மா விட்டுவிட முடியுமா?! நமக்கென்ன 'வேட்டைக்கார வேம்பு'விற்கு இருப்பது போல் பருத்த வாசகர் வட்டமா இருக்கிறது?! ஆனாலும் அவரது வேண்டுகோளான கேண்டியின் புகைப்படத்தை அனுப்பி வைக்க கேண்டி உறுதியாக மறுத்துவிட்டாள். காரணம்: 'ஐ ப்ரோ' திருத்தி சில காலம் ஆகிவிட்டதாம். தன் அழகை அப்-டேட் செய்து 'போட்டோ செண்டரில்' படம் எடுத்து தன் ரசிகர்களுக்கு வழங்க போகிறாளாம்.

இப்போதைக்கு என்னால் கீழ்கண்ட கேண்டி படங்களைத்தான் தர முடிந்திருக்கிறது. க்ரிஷ் மன்னிப்பாராக...







Comments

ஏன் இந்த கொலை வெறி... கடுப்பாகி போய்டோம்...
selventhiran said…
விக்கி உண்மையச் சொல்லுங்க...
அடியேய்...
கோபால கிருஷ்ணன் என்றால் கோ.கிருஷ் அல்லது ஜி.கிருஷ்னு இருக்கணும்டி...
selventhiran said…
க்ருஷ், கிழஞ்செழியன் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்...
Anonymous said…
who is candy anyway?
Anonymous said…
அப்பா பெயர் கந்தசாமி. அதனால்தான் கே.

- கே. கிருஷ்

Popular Posts