காளியைப் புணர்பவன்

ஆகச்சிறந்த புணர்ச்சியை
நிறைவேற்ற வேண்டுமாயின்
காளியைத்தான் புணரவேண்டும்
அவளுக்குத்தான்
ஆயிரம் கைகள்...

... ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன என்ற வசுமித்ர - னின் கவிதைத் தொகுப்பின் (கறுப்புப் பிரதிகள் வெளியீடு) ஒவ்வொரு கவிதைகளும் இக்கவிஞன் மீதான ஈர்ப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொகுப்பின் சில கவிதைகளை எவ்வளவும் முயன்றும் அணுக முடியவில்லை என்பதை எனது புரிதலின் இயலாமை என்பதாகவேக் கருதுகிறேன் என்ற போதும் குறுவாள், துயரம் போன்ற வார்த்தைகள் அடிக்கடி இடம்பெறுவது ஒரு மெல்லிய அயர்ச்சியைக் கொடுக்கிறது. இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது ஏற்படுகிற வாசாகானுபவத்தைப் பதிவு செய் என்கிறார் ரமேஷ் அண்ணா. அப்படிச் செய்தால் பூனை வெளிப்பட்டு விடும் அபாயம் இருப்பதால் அதைத் தவிர்க்கிறேன்.

Comments

Popular Posts