மனுஷ்ய நாடகம்

"எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போடா..."

"யாருக்கும் பதில் சொல்ற அளவுக்கு என் நெலமை இல்லைமா..."

"இப்படி சொல்ல உனக்கு எப்படிடா மனசு வருது?"

" என் நெலமை அப்படிம்மா"

"போடா... நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா? ஒன்னய நம்பி எல்லாத்தயும் எழந்துட்டேனடா... நாங் செத்தாதான்டா என் அன்பு ஒனக்கு புரியும்"

"ப்ளீஸ் அப்படி சொல்லதம்மா"

"அப்படித்தான்"

"ப்ளீஸ் அழாதே"

"ஒன்னய காதலிச்சதுக்கு கண்ணீரும், கதறலும்தாண்டா மிச்சம். ஒனக்காக எத்தன அவமானம், எத்தன கஷ்டம், எத்தன கோவில், எத்தன விரதம்... எல்லாத்துக்கும் சேத்து பெருசா கொடுத்திட்டேடா... ஒங்கூட பழகுன மத்த பொண்ணுங்கள மாதிரி என்னையும் நெனச்சிட்டியேடா"

"ஐயோ மா... ப்ளீஸ்... நாந்தான் முதல்லயே சொன்னேனே... என் குடும்பத்துல இதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்கன்னு... நீதான் கேக்கல... இப்ப வந்து என் சொக்காயை பிடிச்சி இழுக்கற..."

"அதாம்பா நீ ஏன் சொல்ல மாட்டே... ஆம்பள... நீ கரெக்ட்... நாந்தான் சரியில்லாதவளாயிட்டேன்.. நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தேனடா...ஒனக்காக என்னையே கொடுத்தேன். இப்ப நடுத்தெருவுல நிக்கறேன்"

"அப்படியெல்லாம் இல்லம்மா... நான் இருக்கேன்ல... உன்ன அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன்மா..."

"ஐயோ கடவுளே... என்ன வச்சிக்கப் போறேன்றியாடா..?"

"ச்சீ அப்படி சொல்லலடி..."

"த்தூ தொடாதடா... நீ தொட்டா எனக்கு கூசுது... நீ நான் காதலிச்ச சதீஷ் இல்லை... வேற யாரோ...ப்ளீஸ் என்னைத் தொடாதே..."

"ஏய் ஆனந்தி என்ன இது? ஏன் இப்படி அழுறே? யாராவது பாத்தாங்கண்ணா? எனக்கும் உனக்கும் தொடர்புன்னு நெனச்சுடுவாங்க...ப்ளீஸ் கண்ண தொடச்சுக்கோ"

“யக்கா கடல வேணுமாக்கா... அவிச்ச கடல...” குறுக்கிடுகிறது சுண்டல் சிறுவனின் குரல்.

“வேண்டாம்பா”

“அண்ணே அக்காவுக்கு வாங்கி கொடுங்கண்ணே... அழுகையை நிப்பாட்டிடும்”

“டேய்... போடா”

“அக்கா சொல்லுங்கக்கா... மொத போணிக்கா...”

“டேய் இம்சை பண்ணாதடா பரதேசி... இடத்த காலி பண்ணு...” ஆத்திரத்தில் இரைந்தான் சதீஷ்.

“ த்தா... ஒத்த ரூவாய்க்கி சுண்டல் வாங்க வக்கு இல்ல... ரோசத்த பாரு...யக்கா இவனுக்கொசரம் கண்ண கசக்காத” சொல்லி நகர்ந்தான் சுண்டல் சிறுவன்.

“ ஐய்யோ சுண்டல் விக்கிறவனுக்கு தெரியுது... எனக்குத் தெரியாம போச்சே...” தலையிலடித்துக்கொண்டு அழத் துவங்கினாள் ஆனந்தி.

இரண்டு மூன்று அடிகள் தள்ளி நின்று கொண்டான் சதீஷ்.

நானும் கிளம்பி விட்டேன்.

Comments

நெசமாவா சொல்றீங்க?
selventhiran said…
நெசமாவா சொல்றீங்க? // கோபால் சார் கலாய்ச்சுட்டீங்களே:))
செல்வா,

போன பின்னூட்டத்தில் நானே அருமை என்பதைக்கொஞ்சம் நீட்டிட்டேன்...:-))))


அது இருக்கட்டும். கோபால் 'சார்'ஆகத்தான் இருக்கணுமா? :-))))
selventhiran said…
'சார்'ஆகத்தான் இருக்கணுமா? :-)))) // பெரியவங்களுக்கு எப்பவும் மரியாதை கொடுப்பான் இந்த செல்வேந்திரன்னு உங்களுக்கு தெரியாதா அண்ணா :)
அட செல்வேந்திரா......

அண்ணி, அம்மா என்றொரு ஜீவராசி இருக்கு என்பதாவது தெரியுமா?:-)))))
எப்படி இப்படி எல்லாம்.

Popular Posts