இருக்கிறேன்

மரபணு சோதனையில்
மரித்த எலிகளுக்கான
மவுன அஞ்சலி கூட்டத்தில்
விஞ்ஞானிகளுக்கு மத்தியில்
ஒரு பருத்த பூனையும் இருந்தது.

யுவான்சுவாங்
வந்துபோனது
எல்லாருக்கும் தெரிகிறது
பாவம்
பாட்டன் பெயர்தான்
பலருக்குத் தெரிவதில்லை
அவளும் அவளும்
ஆக்ரோஷமாய்
திட்டிக்கொள்கின்றனர்
"விபச்சாரியென்று"
அடடா...
இத்தனைநாள்
எதிர்வீட்டில் இருந்தும்
எனக்கிது தெரியவில்லையே...

எப்பொருள்
யார் யார்கை
இருப்பினும்
அப்பொருள் அடிப்பவன்
பக்கிரி!

நாளைய காட்சிக்கான
வசனங்களை எழுதலாம்;
புதியதாய் வேண்டுமாம்
புரொடியூசருக்கு...
வசனங்கள் கூடவா?!

சாவகாசங்கள்
எறியூட்டப்பட்ட
எழுத்தாளனொருவன்
எழுதிக்குவிக்கையில்
தற்செயலாய்
பிறந்துவிடுகிறது
கவிதை!

ஆறே வாரத்தில்
கிடைத்துவிட்டது
சிகப்பழகு
இனி
நாய்கள் நக்க வரும்...

Comments

Anonymous said…
ங்கொய்யால சூப்பர்யா
selventhiran said…
வாங்க அணானி.
Anonymous said…
poems are good.funny

Popular Posts